ரூ. 10,000 சுருட்டிய வங்கி பெண் கேஷியர்!!
திருநெல்வேலி:நெல்லை பாளையங்கோட்டையில் பணம் கொடுக்கும்போது ரூ. 10 ஆயிரத்தை திருடிய வங்கி பெண் ஊழியர் கைது செய்யப்பட்டார்.
பாளையங்கோட்டை தலைமை தபால் நிலையத்திலிருந்து கடந்த மாதம் 6ம் தேதி அரசு வங்கியில் செக் மூலம் ரூ.5 லட்சம் பணம் எடுத்தனர்.
அலுவலகத்திற்குச் சென்ன்று பணத்தை எண்ணிப் பார்த்துள்ளனர். அப்போது அதில், ரூ. 10,000 குறைவாக இருந்தது தெரிய வந்தது.
அதிர்ச்சி அடைந்த தபால் அலுவலக அதிகாரிகள், வங்கி அதிகாரிகளிடம் முறையிட்டனர். இதையடுத்து வங்கி அதிகாரிகள் விசாரணையில் இறங்கினர்.
வங்கியில் பொருத்தப்பட்டிருந்த ரகசிய கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளைப் போட்டுப் பார்த்தனர். அப்போது, வங்கி கேஷியரான அந்தோணி மேரி (38), பணத்தை எண்ணியபோது, ரூபாய் நோடுக் கட்டிலிருந்து நைசாக ரூ.10 ஆயிரத்தை உருவி எடுத்தது தெரிய வந்தது.
இதை தொடர்ந்து வங்கியின் முதன்மை மேலாளர் கிருஷ்ணன் (48) போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்தோணி மேரியை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.10 ஆயிரத்தையும் போலீசார் மீட்டனர்.












Click it and Unblock the Notifications