For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

95 அடிக்கு வந்ததும் மேட்டூர் அணைதிறக்கப்படுமா?: அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:மேட்டூர் அணையின் நீர் மட்டம் 95 அடி உயர்ந்ததும், பாசனத்திற்காக அணை திறக்கப்படுமா என்பதை தெரிவிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Mettur Dam

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க முன்னாள் தலைவர் ஆர்.கருப்பன் உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில் மேட்டூர் அணைய பாசனத்திற்காக திறக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனுவை தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி ஜோதிமணி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது.

அப்போது தமிழக அரசுத் தரப்பில், அணையின் நீர் மட்டம் 95 அடியாக உயர்ந்ததும் அணை திறக்கப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இதையடுத்து கருப்பனின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந் நிலையில், வருகிற 25ம் தேதி அணை திறக்கப்படும் என அரசு நேற்று அறிவித்தது. இதையடுத்து வழக்கறிஞர் கருப்பன் இன்று தலைமை நீதிபதி ஏ.பி.ஷா முன்பு ஆஜராகி, மேட்டூர் அணையின் தற்போதைய நீர் மட்டம் 93.8 அடியாக உள்ளது. இன்றைக்குள் 95 அடியாக நீர்மட்டம் உயர்ந்து விடும்.

ஆனால் பாசனத்திற்காக 25ம் தேதிதான் அணை திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு அளித்துள்ள உறுதிமொழிக்கு எதிரானது என்றார்.

இதையடுத்து 95 அடிக்கு நீர்மட்டம் உயர்ந்தவுடன் மேட்டூர் அணை திறக்கப்படுமா, இல்லையா என்பதை இன்றைக்குள் அரசிடம் கேட்டுத் தெரிவிக்குமாறு அரசு வழக்கறிஞருக்கு தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X