ஓடும் பஸ்சில் போலீஸ்காரர் மரணம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:சென்னையிலிருந்து நெய்வேலிக்கு பேருந்தில் சென்ற போலீஸ்காரர் மாரடைப்பால் மரணமடைந்தார்.

மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர் கிரண்குமார். 45 வயதாகும் இவர் நெய்வேலி அனல் மின் கழகத்தில் பாதுகாப்புப் பணியில் உள்ள மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்.

மகாராஷ்டிராவுக்கு விடுமுறையில் சென்றிருந்த கிரண்குமார் மீண்டும் பணியில் சேருவதற்காக சென்னைக்கு ரயிலில் வந்தார். பின்னர் பேருந்தில் நெய்வேலி கிளம்பினார்.

அவர் சென்ற பேருந்து குரோம்பேட்டை அருகே போய்க் கொண்டிருந்தபோது, அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+