சாமி கும்பிட சென்ற 14 பேர் விபத்தில் பலி
Subscribe to Oneindia Tamil
பெங்களூரு:
கர்நாடக மாநிலத்தில் நேற்று நடந்த பயங்கர விபத்தில் சாமி கும்பிடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் உள்பட 14 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
![]() |
பெங்களூரைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் உள்பட 14 பேர் ஒரு டாடா சுமோ வேனில் சித்ரதுர்கா மாவ்ட்டம் உக்கடகத்ரி என்ற இடத்தில் உள்ள கோவிலுக்கு சாமி கும்பிடச் சென்றனர்.
அவர்கள் சென்ற வேன் நேற்று அதிகாலை, உக்கடகத்ரி அருகே சென்றபோது, எதிரே வந்த பேருந்துடன் நேருக்கு நேர் மோதியது.
இதில் வேனில் பயணம் செய்த 14 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். பேருந்து டிரைவர் தப்பி விட்டார். இந்த விபத்தால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
மிகவும் சிரமப்பட்டு விபத்தில் சிக்கிப் பலியானவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன.













Click it and Unblock the Notifications