ஓட்டுப் போடும்படி யாரையும் வலியுறுத்தமுடியாது-தேர்தல் ஆணையம்
டெல்லி:குடியரசுத் தலைவர் தேர்தலில் ஓட்டுப் போடும்படி யாரையும் தேர்தல் ஆணையம் கட்டாயப்படுத்த முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
குடியரசுத் தலைவர் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக 3வது அணியான ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி முடிவெடுத்துள்ளது. இதனால் அதிருப்தி அடைந்த பாஜக கூட்டணி, தேர்தலைப் புறக்கணிப்பது சட்டப்படி செல்லுமா, அப்படிக் கூற முடியுமா என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பியது.
இதுகுறித்து தேர்தல் ஆணையத் தரப்பில் கூறுகையில், குடியரசுத் தலைவர் தேர்தலில் ஓட்டுப் போட வேண்டும் என யாரையும் கட்டுப்படுத்த முடியாது. கட்டாயப்படுத்தவும் முடியாது. ஓட்டுப் போடுவதும், போடாமல் இருப்பதும் அவரவர் விருப்பம்.
எனவே ஓட்டுப் போடும்படியோ, புறக்கணிக்கக் கூடாது என்றோ யாரையும் கட்டாயப்படுத்த முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
3வது அணிக்கு மொத்தமாக 1 லட்சத்து 5 ஆயிரம் ஓட்டுக்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications