புகையில்லா உலகம் வேண்டும்-ராமதாஸ்
சென்னை:தமிழகத்தில் அரசு மதுக்கடைகளை மூடச் சொல்லி ஒவ்வொரு மாவட்ட கலெக்டரிடமும் மனு கொடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
சென்னையை அடுத்த மறைமலைநகரில் பாமகவின் சீருடை அணிவகுப்பு மாநாடு நடந்தது. முன்னாள் எம்.பி. ஏ.கே.மூர்த்தி தலைமை தாங்கிய இந்த மாநாட்டில் ராமதாஸ் பேசியதாவது
லாட்டரி ஒவ்வொரு குடும்பத்தையும் எப்படி சீரழித்ததோ, அதே போல் தான் கஞ்சா. குறிப்பாக மாணவர்கள் எப்படி அதை அதிகளவு பயன்படுத்துகிறார்கள் என்பது உங்களுக்கு நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை.
இங்கு வந்துள்ள அனைவருக்கும் வேலை கொடுக்கிறேன். அந்த வேலை தமிழகத்தை அழித்துக் கொண்டிருக்கும், அதிலும் குறிப்பாக இளைஞர் சமுதாயத்தை வளர விடாமல் கெடுக்கும் தீய சக்திகளை ஒழிக்கும் போராட்டம் தான்.
பீடியை குடிசைத் தொழில் என சொல்லிக் கொண்டு அதிகம் பேரின் வாழ்வை அழித்துவிட்டு, பீடி கம்பெனி முதலாளிகள் பணத்தில் திளைக்கிறார்கள்.
பீடி சுற்றுபவர்களுக்கு குடிசைத் தொழில் அது மட்டும் தானா. ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிசைத் தொழில்கள் உள்ளன. அதன் மூலம் மாற்று தொழிலை கொடுப்பதன் மூலம் பீடித் தொழிலை அழிக்க வேண்டும். புகையில்லாத உலகமாக மாற வேண்டும். முதலில் புகையிலை இல்லா தமிழ்நாடாக மாற்ற வேண்டும்.
இது 600 கோடி மக்களை பற்றிய கனவு. இதற்காக இந்தியாவில் கவலைப்படுபவர் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் மட்டுமே. இதற்காகதான் அமெரிக்காவில் 10,000 பேர் சேர்ந்து விருது கொடுத்தார்கள்.
வரும் 20ம் தேதி உலக சுகாதார அமைப்பு, புகையில்லாத இந்தியாவாக மாற்ற பாடுபடும் அன்புமணிக்கு விருது கொடுக்க போகிறது. இதனால் நமது தமிழ்நாட்டுக்கும், பாட்டாளி இளைஞர் சங்கத்துக்கும் பெருமை.
மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உடலுக்கு கேடு என்கிறார்கள். ஆனால் அதை ஊக்குவிக்கும் வகையில் தெருவிற்கு தெரு மதுக்கடைகள் இருக்கின்றன. அதை மூடச்சொல்லி அனைத்து மாவட்ட கலெக்டர்களிடமும் மனு கொடுங்கள் என்றார்.
-
சென்னை உட்பட.. 30 மாவட்டங்களுக்கு பறந்த மஞ்சள் அலர்ட்! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
இடி, மின்னலுடன் வெளுக்க போகுது மழை! இன்று 4 மாவட்டங்களில் கனமழை அலர்ட்! கோடை வெயிலுக்கு ஜில் அப்டேட் -
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம்












Click it and Unblock the Notifications