சென்னையிலிருந்து கேரள சென்ற இருவரை தாக்கி11 கிலோ தங்கம் கொள்ளை- மதிப்பு ரூ. 1 கோடி!!
கோழிக்கோடுசென்னையில் இருந்து சென்ற இரு தங்க வியபாரிகளை பின்தொடர்ந்து வந்து தாக்கி 11 கிலோ தங்கக் கட்டிகளை ஒரு கும்பல் கொள்ளையடித்துள்ளது.
அஷ்ரப் (30), முகமது அலி(28) ஆகியோர் கேரளத்தில் குஞ்சு மொய்தீன் என்ற நகைக் கடைக்காரருக்கு கொடுப்பதற்காக சென்னையில் சுந்தர் சேட் என்பவரிடமிருந்து 11 கிலோ தங்கக் கட்டிகளை எடுத்துச் சென்றனர். அதன் மதிப்பு ரூ. 1 கோடியாகும்.
சென்னையிலிருந்து ஆலப்புழா எக்ஸ்பிரஸில் பயணித்த இவர்கள் தங்கக் கட்டிகள் அடங்கிய 2 சூட்கேஸ்களுடன் ஒற்றைப்பாலம் என்னுமிடத்தில் இறங்கி, கோழிக்கோடு செல்லும் பஸ்ஸில் ஏறினர்.
இவர்கள் சென்ற பஸ்ஸை கார் ஒன்று வழிமறித்தது. அதிலிருந்து இறங்கிய 9 பேர் கையில் பயங்கர ஆயுதங்களுடன் பஸ்சில் ஏறினர். பிற பயணிகள் யாரையும் தாக்காமல், அஷ்ரப் மற்றும் முகம்மது அலி ஆகியோரை மட்டும் தாக்கிவிட்டு தங்க கட்டிகள் இருந்த சூட்கேஸ்களை பறித்துக் கொண்டு காரில் ஏறித் தப்பிவிட்டனர்.
கொள்ளை போன தங்கக் கட்டிகளின் மதிப்பு சுமார் ரூ. 1 கோடி ஆகும்.
இதையடுதது டிரைவர் பஸ்ஸை சொர்ணூர் காவல் நிலையத்துக்கு ஓட்டிச் சென்றார். இந்த சம்பவம் குறித்து முகமது அலியும், அஷ்ரபும் போலீஸில் புகார் செய்தனர்.
சென்னையிலிருந்தே இந்த இருவரையும் கொள்ளைக் கும்பல் தொடர்ந்து வந்திருக்கலாம் என கருதப்படுகிறது.
கொள்ளைபோன தங்கக் கட்டிகளுக்கு சரியான கணக்கு வழக்கு உள்ளதா எனவும் போலீஸார் விசாரித்தும் வருகின்றனர். மேலும் அலிக்கும் அஷ்ரபுக்கும் கொள்ளைக் கும்பலுக்கும் இடையே தொடர்பு உள்ளதா, இவர்கள் நாடகமாடி சுந்தர் சேட்டை ஏமாற்ற முயன்றார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.












Click it and Unblock the Notifications