Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

லஞ்சம் தராததால் பிரசவம் பார்க்காதஅரசு மருத்துவமனை- பெண் பலி

Subscribe to Oneindia Tamil

திருப்பத்தூர்:வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்கு வந்த பெண்ணிடம் லஞ்சம் கேட்டு ஊழியர்களும் டாக்டர்களும் இழுந்தடித்ததால் அந்தப் பெண் பரிதாபமாக பலியானார்.

திருப்பத்தூர் வெள்ளக்குட்டை அருகே உள்ள நன்னேரியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஆறுமுககத்தின் மனைவி லட்சுமிக்கு(26) நேற்று பிரசவ வலி ஏற்பட்டது.

இதையடுத்து மாலை 4 மணியளவில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

வலியால் துடித்துக் கொண்டிருந்த லட்சுமிக்கு பிரசவம் பார்க்க டாக்டர்கள் யாரும் முன் வராமல் காலம் தாமதம் செய்துள்ளனர். பிரசவ சீட்டு வாங்கி வருமாறு கூறியுள்ளனர். ஆனால், பிரசவ சீட்டு தராமல் ஊழியர்கள் கால தாமதம் செய்தனர். காரணம், அவர்கள் கேட்ட லஞ்சத்தை தர ஆறுமுகத்திடம் பணம் இல்லாதது தான்.

கடைசியாக அங்கே இங்கே காசு புரட்டி சித்ரா என்ற மருத்துவமனை ஊழியரிடம் ரூ.500 லஞ்சமாக கொடுத்துள்ளார் ஆறுமுகம். அதன் பின்னர் இரவு 9 மணிக்குத் தான் லட்சுமிக்கு பிரசவம் பார்க்கப்பட்டதாம்.

ஆனால், மிக நீண்ட தாமதம் செய்யப்பட்டதால் லட்சுமி இறந்து விட்டார். ஆனால் பிரசவத்தில் அதிக ரத்தபோக்கு ஏற்பட்டு தான் லட்சுமி இறந்ததாக டாக்டர்கள் கூறியுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த லட்சுமியின் உறவினர்கள் உடலை வாங்க மாட்டோம் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக நன்னேரி கிராம மக்களும் ஒன்று திரண்டு வந்ததால் நிலைமை மோசமானது.

இதையடுத்து திருப்பத்தூர் போலீஸார் கிராம மக்களிடம் பேச்சு நடத்தினர். லஞ்சம் கேட்டு தன் மனைவியை கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாரிடம் ஆறுமுகம் கூறினார்.

உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டதையடுத்து உடலை வாங்கிச் சென்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+