மனைவியை வீட்டில் சிறை வைத்த கணவன்:எஸ்எம்எஸ் மூலம் போலீஸ் மீட்டது
ஈரோடு:வீட்டில் சிறை வைக்கப்பட்ட புதுப்பெண் எஸ்எம்எஸ் தகவல் மூலம் அதிரடியாக மீட்கப்பட்டார்.
ஈரோடு கொல்லம்பாளையத்தைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மகன் சதீஷ்(22) விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வருகிறார்.
கோவையில் வேலை பார்த்தபோது திருப்பூரைச் சேர்ந்த வெங்கடாசலத்தின் மகள் கீர்த்தனாவை(21) காதலித்துள்ளார்.
சில வாரங்களுக்கு முன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து கீர்த்தனாவை அவரது குடும்பம் ஒதுக்கி வைத்துவிட்டது.
ஆனால், திருமணத்துக்குப் பின்னர் தான் சதீஷின் உண்மை உருவம் கீர்த்தனாவுக்குத் தெரிய வந்தது.
சதீஷ் ஒரு சந்தேக பேயாக இருந்துள்ளார். வேலைக்கு செல்லும்போது வீட்டில் தனியாக இருந்த கீர்த்தனாவின் மீது சந்தேகப்பட ஆரம்பித்தார்.
இதனால் வேலைக்கு செல்லும் போது கீர்த்தனாவை வீட்டில் வைத்து பூட்டிவிட்டுச் சென்றுவிடுவாராம். தினமும் இரவு தான் வீடு திரும்புவார். இதனால் பகல் எல்லாம் வீட்டில் சிறை இருந்துள்ளார் கீர்த்தனா.
மேலும் அக்கம்பக்கத்து வீட்டினருடனும் பேச விடாமல் வைத்துள்ளார். செல்போனையும் சார்ஜ் செய்து தரவில்லை. தனது குடும்பமும் உறவினர்களும் தன்னை ஒதுக்கி வைத்துவிட்ட நிலையில் யாரையும் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் இருந்துள்ளார் கீர்த்தனா.
இந் நிலையில் எப்படியோ கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. ராஜேந்திரனின் செல் நம்பரை அறிந்த கீர்த்தனா, ப்ளீஸ் ஹெல்ப் மீ என மெசேஜ் அனுப்பியுள்ளார். (எஸ்எம்எஸ் அனுப்ப மட்டுமே அதில் கரன்சி இருந்துள்ளது)
இதைப் பார்த்த ராஜேந்திரன் உடனடியாக ஈரோடு எஸ்.பி. அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு, கீர்த்தனாவை மீட்க உத்தரவிட்டார்.
இதையடுத்து எஸ்எம்எஸ் மூலமே கீர்த்தனாவுடன் பேசிய போலீசார் அவர் சிறை வைக்கப்பட்ட வீட்டை அறிந்து கீர்த்தனாவை மீட்டனர்.
சதீஷிடம் போலீசார் விசாரணை நடத்தவுள்ளனர்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications