தாத்தா தோற்றார் பாட்டி ஜெயித்தார்!

Subscribe to Oneindia Tamil

ஜெய்ப்பூர்: குடியரசுத் தலைவர் தேர்தலில் பைரான் சிங் ஷெகாவத் தோல்வியடைந்ததால் அவரது கிராம மக்கள் பெரும் சோகத்தில் உள்ளனர். அதேசமயம், பிரதீபா பாட்டீலின் கணவர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் படு உற்சாகமாக உள்ளனர்.

Prathiba Patil

ராஜஸ்தான் மாநிலம், சிகார் மாவட்டத்தில் உள்ள கச்சரியவாஸ்தான் ஷெகாவத்தின் சொந்த ஊராகும். ஷெகாவத் குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற வேண்டி இந்தக் கிராம மக்கள் பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்து வந்தனர்.

சிறப்பு வழிபாடுகளுக்கும், ஹோமங்களுக்கும் பஞ்சம் இல்லை. ஆனால் அவர்களது பிரார்த்தனைகளை மீறி ஷெகாவத் தோற்று விட்டார். இதனால் ஷெகாவத் கிரா மக்கள் பெரும் சோகமடைந்துள்ளனர்.

Shekhavat

எப்படியும் ஷெகாவத் குடியரசுத் தலைவராகி விடுவார் என்ற நினைப்பில் அவர்கள் மிகப்பெரிய விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தனர். அதிலும் மண் விழுந்துவிட்டது. 5 ஆண்டுகளுக்கு முன்பு ஷெகாவத் துணைக் குடியரசுத் தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட போது மிகப்பெரிய அளவில் விழா எடுத்துக் கொண்டாடினர்.

ஆனால் அவர் இப்போது தோல்வியடைந்துவிட்டதால் கச்சரியாவாஸ் கிராமத்தின் நிலைமை தலைகீழாக உள்ளது.

தாத்தா தோற்றார் பாட்டி ஜெயித்தார்

அதே சமயம், அதே சிகார் மாவட்டத்தைச் சேர்ந்த சோட்டிலசலால் கிராமம் படு உற்சாகமாக உள்ளது. இந்தக் கிராமம்தான், பாட்டீலின் கணவரின் சொந்த ஊராகும்.

தங்களது ஊரைச் சேர்ந்தவர் குடியரசுத் தலைவராகியுள்ளதால் இந்த கிராம மக்கள் உற்சாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளனர். எங்கள் மாவட்ட தாத்தா தோற்றாலும் கூட பாட்டி ஜெயித்து விட்டார். எப்படியோ எங்களது மாவட்டம் குடியரசுத் தலைவரைக் கொடுத்த மாவட்டமாகி விட்டது என்ற பெருமையில் அவர்கள் உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+