து. ஜனாதிபதி: தே.ஜ.கூ வேட்பாளர் இன்று அறிவிப்பு
டெல்லி:துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர் இன்று அறிவிக்கப்படவுள்ளார்.
துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் 3வது அணி முதலில் வேட்பாளர் பெயரை அறிவித்தது. சமாஜ்வாடிக் கட்சியைச் சேர்ந்த எம்.பி. ரஷீத் மசூத் போட்டியிடுகிறார்.
காங்கிரஸ் கூட்டணி மற்றும் இடது சாரிகள் சார்பில் தேசிய சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் முகம்மது அன்சாரி போட்டியிடுகிறார்.
இந்த நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியும் வேட்பாளரை நிறுத்தவுள்ளது. போட்டியைத் தவிர்க்குமாறு காங்கிரஸ் கட்சி விடுத்த கோரிக்கையை அந்தக் கூட்டணி ஏற்கனவே நிராகரித்து விட்டது. எனவே துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் மும்முனைப் போட்டி உறுதியாகியுள்ளது.
இந்த நிலையில் தனது தரப்பு வேட்பாளரை முடிவு செய்ய முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வீட்டில், இன்று மாலை தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்கள் ஆலோசனை நடத்தவுள்ளனர். அதன் பின்னர் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படும்.
முன்னாள் மாநிலங்களவைத் தலைவர் நஜ்மா ஹெப்துல்லா வேட்பாளராக அறிவிக்கப்படக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications