அண்ணா பல்கலை.யில் கரண்ட் கட்வராண்டாவில் தூங்க விரும்பிய கலாம்!
சென்னை:அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மின் வெட்டு ஏற்பட்டதால், நேற்று இரவு முழுவதும் ஆளுநர் மாளிகையில் தங்கினார் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்.
நேற்று இரவு இந்திய விமானப்படையின் விமானம் மூலம் சென்னை வந்தார் கலாம்.
அவருக்கு விமான நிலையத்தில் தமிழக அரசின் சார்பில் சிறப்பான வரவேற்பு தரப்பட்டது. இதில் நிதியமைச்சர் க.அன்பழகன், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், தலைமைச் செயலாளர் திரிபாதி, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் விஸ்வநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கலாமை வரவேற்றனர்.
பின்னர் நேராக பல்கலைக்கழக விருந்தினர் மாளிகைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு கூடியிருந்த செய்தியாளர்களிடம் கலாம் கூறுகையில் தமிழகத்தில் பிறந்து, தமிழகத்தில் வளர்ந்து, இப்போது தமிழகத்திற்கேத் திரும்பி வந்திருப்பது சந்தோஷமாக இருக்கிறது. இனி நான் ஆசிரியர் பணியைத் தொடரவுள்ளேன் என்றார்.
அடுத்த சில நிமிடங்களிலேயே அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மின்சாரம் போய் விட்டது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாக மின்சாரம் வரவில்லை. இதனால் புழுக்கத்தில் நெளிந்த கலாம், விருந்தினர் மாளிகை வளாக வராண்டாவில் காற்றாட படுத்துத் தூங்க விருப்பம் தெரிவித்தார்.
ஆனால் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அதற்கு பாதுகாப்பு அதிகாரிகள் அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து கலாமை அருகில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு அழைத்துச் சென்றனர். நேற்று இரவு முழுவதும் கலாம் அங்குதான் தங்கியிருந்தார்.
இரவு 11 மணிக்கு கலாம் ஆளுநர் மாளிகைக்கு வந்தார். இன்று காலை 10.30 மணிக்குத்தான் அவர் மீண்டும் அண்ணா பல்கலைக்கழக விருந்தினர் மாளிகைக்குத் திரும்பினார்.
இன்று பல்கலைக்கழகத்தின் விவேகானந்தா ஆடிட்டோரியத்தில் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களை கலாம் சந்தித்தார்.
பிற்பகலில் முதுநிலை பொறியியல் மாணவர்களை சந்தித்துப் பேசினார். மாலை 5 மணிக்கு இளநிலை பொறியியல் மாணவர்களை சந்தித்தார்.
அடுத்த வாரம் முதல் தனத ஆசிரயர் பணியைத் தொடங்குகிறார்.
அப்துல் கலாம் கெளரவப் பேராசிரியராக பணியாற்றுவற்காக சம்பளம் வாங்கப் போவதில்லையாம்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் கலாம் தங்கியுள்ள விருந்தினர் மாளிகைக்கு மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
சென்னையில் வீடுகளுக்கு குழாய் மூலம் கேஸ்.. கட்டணம், பாதுகாப்பு எப்படி.. அதிகாரி விளக்கம் -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தலைநகர் சென்னையை மொத்தமாக அள்ள திமுக பிளான்.. 15 தொகுதிகளில் நேரடி போட்டி! 1ல் காங்கிரஸ்! -
Vijay: வேணும்னே பண்றாங்க.. 10 குற்றச்சாட்டுகளுடன் தலைமை செயலகத்துக்கு நேரில் போன விஜய்! -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு!












Click it and Unblock the Notifications