அண்ணா பல்கலை.யில் கரண்ட் கட்வராண்டாவில் தூங்க விரும்பிய கலாம்!
சென்னை:அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மின் வெட்டு ஏற்பட்டதால், நேற்று இரவு முழுவதும் ஆளுநர் மாளிகையில் தங்கினார் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்.
நேற்று இரவு இந்திய விமானப்படையின் விமானம் மூலம் சென்னை வந்தார் கலாம்.
அவருக்கு விமான நிலையத்தில் தமிழக அரசின் சார்பில் சிறப்பான வரவேற்பு தரப்பட்டது. இதில் நிதியமைச்சர் க.அன்பழகன், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், தலைமைச் செயலாளர் திரிபாதி, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் விஸ்வநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கலாமை வரவேற்றனர்.
பின்னர் நேராக பல்கலைக்கழக விருந்தினர் மாளிகைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு கூடியிருந்த செய்தியாளர்களிடம் கலாம் கூறுகையில் தமிழகத்தில் பிறந்து, தமிழகத்தில் வளர்ந்து, இப்போது தமிழகத்திற்கேத் திரும்பி வந்திருப்பது சந்தோஷமாக இருக்கிறது. இனி நான் ஆசிரியர் பணியைத் தொடரவுள்ளேன் என்றார்.
அடுத்த சில நிமிடங்களிலேயே அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மின்சாரம் போய் விட்டது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாக மின்சாரம் வரவில்லை. இதனால் புழுக்கத்தில் நெளிந்த கலாம், விருந்தினர் மாளிகை வளாக வராண்டாவில் காற்றாட படுத்துத் தூங்க விருப்பம் தெரிவித்தார்.
ஆனால் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அதற்கு பாதுகாப்பு அதிகாரிகள் அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து கலாமை அருகில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு அழைத்துச் சென்றனர். நேற்று இரவு முழுவதும் கலாம் அங்குதான் தங்கியிருந்தார்.
இரவு 11 மணிக்கு கலாம் ஆளுநர் மாளிகைக்கு வந்தார். இன்று காலை 10.30 மணிக்குத்தான் அவர் மீண்டும் அண்ணா பல்கலைக்கழக விருந்தினர் மாளிகைக்குத் திரும்பினார்.
இன்று பல்கலைக்கழகத்தின் விவேகானந்தா ஆடிட்டோரியத்தில் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களை கலாம் சந்தித்தார்.
பிற்பகலில் முதுநிலை பொறியியல் மாணவர்களை சந்தித்துப் பேசினார். மாலை 5 மணிக்கு இளநிலை பொறியியல் மாணவர்களை சந்தித்தார்.
அடுத்த வாரம் முதல் தனத ஆசிரயர் பணியைத் தொடங்குகிறார்.
அப்துல் கலாம் கெளரவப் பேராசிரியராக பணியாற்றுவற்காக சம்பளம் வாங்கப் போவதில்லையாம்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் கலாம் தங்கியுள்ள விருந்தினர் மாளிகைக்கு மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
"சாப்பாடு கிடையாது”.. சென்னையில் மக்களை அதிரவைத்த ஹோட்டல் அறிவிப்பு பலகை.. கேஸ் தட்டுப்பாட்டால் ஷாக் -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
மின்சார வாரியம் சர்ப்ரைஸ்.. தமிழகத்தில் திடீர்னு ஏறிய கரண்ட் தேவை! உடனே வந்த மின்வாரிய ஹேப்பி நியூஸ் -
பட்டா காத்திருந்தவர்களுக்கு ஜாக்பாட்.. 5952 மனுக்களில் குட் நியூஸ்.. கோவை, சென்னையில் 24 மணி அதிசயம் -
சென்னை மொத்தமாக முடங்கியது.. சிலிண்டர் இல்லாமல் அடுத்தடுத்து மூடப்படும் உணவகங்கள். தவிக்கும் மக்கள் -
சென்னை விடுதிகளில் டீ, காபி கிடையாது.. PG-க்கள் அறிவிப்பு! பேச்சுலர்களுக்கு திண்டாட்டம்தான்! -
சிலிண்டர் வரலை! ஆப்பம்லாம் பிறகு பார்ப்போம்! Variety rice கிடையாது! சென்னை ஆனந்தா ஹோட்டல் அறிவிப்பு -
சென்னை கிண்டி மேம்பாலத்தில் ஜொலித்த 1.5 கிலோ தங்கம்.. ஜிஎஸ்டி ஆபீசர் பின்னாடி போனால்? பெரிய ட்விஸ்ட் -
கூடுவாஞ்சேரியில் நள்ளிரவில் நடந்த தீவிபத்து! ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உடல் கருகி பலி! -
LPG Gas Cylinder Shortage LIVE: நாளை முதல் இட்லி, தோசை கிடைக்காது.. சென்னை ஹோட்டல்கள் சங்கம்












Click it and Unblock the Notifications