பெண் புரோக்கரைக் கொன்ற பாடிகார்ட் கைது
புதுச்சேரி:புதுச்சேரியில் பெண் திருமண புரோக்கரை அவருடைய பாடிகார்டுகளே கொலை செய்தனர்.
புதுச்சேரி லாஸ்பேட்டையைச் சேர்ந்தவர் ரத்தினம் (38). கணவரை இழந்த இவர் திருமண புரோக்கராக இருந்தார்.
கடந்த 6ம் தேதி முதல் இவரைக் காணவில்லை. இதையடுத்து இவரது தாயார் போலீஸில் புகார் கொடுத்தார்.
தனது புகாரில், ரத்தினத்திற்குப் பாதுகாப்பாக 4 பாடிகார்டுகள் இருந்ததாகவும் கூறியிருந்தார். இதையடுத்து பாடிகார்டுகளில் ஒருவரான புவன் என்கிற புவனீதரணை போலீஸார் பிடித்து விசாரித்தனர்.
அப்போது, அந்த பாடிகார்டுகள்தான் ரத்தினத்தைக் கொலை செய்து விட்டது தெரிய வந்தது.
பாடிகார்டுகளுக்குப் பணம் கொடுப்பது தொடர்பாக ரத்தினம் ஏமாற்றும் நோக்கில் செயல்பட்டதால் ஆத்திரமடைந்து அவரைக் கொன்று விட்டதும் தெரிய வந்தது.
கொலை செய்யப்பட்ட ரத்தினத்தின் உடலை கழிப்பறை ஒன்றின் செப்டிக் டேங்க்கில் அவர்கள் போட்டிருந்தனர். அழுகிய நிலையில் இருந்த ரத்தினத்தின் உடலை போலீஸார் கைப்பற்றினர்.
புவன் கைது செய்யப்பட்டுள்ளார். மற்ற மூன்று பேரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.
திருமண புரோக்கர் எதற்கு 4 பாடிகார்டுகளுடன் வலம் வந்தார் என்று புரியவில்லை.












Click it and Unblock the Notifications