சிறுவனிடம் ஹோமோ செக்ஸ் முயற்சி- 3 மாணவர்கள் கைது
கோயம்புத்தூர்:கோவையில் சிறுவனை கட்டாயப்படுத்தி ஓரினச் சேர்க்கையில் ஈடுபட முயன்ற மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை உக்கடத்தைச் சேர்ந்த மாணவன் அமீர் சேட்(12) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவன் அப்பகுதியில் ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகிறான்.
காலை மற்றும் மாலை நேரங்களில் தனியார் கல்லூரி ஒன்றில் அரபு மொழி கற்று வருகிறான்.
இந்தக் கல்லூரியில் படிக்கும் சபல புத்திக் கொண்ட மாணவர்கள் சிலர் சிறுவன் சேட்டை கட்டாயப்படுத்தி ஓரினச் சேர்க்கையில் ஈடுபட முயற்சி செய்துள்ளனர்.
இது குறித்து தனது தந்தையிடம் சொல்லி அழுதுள்ளான்.
அமீர்சேட்டின் தந்தை இதைப்பற்றி போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி சீனியர் மாணவர்களான பாஷித்(23), சுல்தான்(21), அமானுல்லா(22), அப்பாஸ்(21) ஆகியோரை கைது செய்தார்.
இவர்களால் வேறு எந்த மாணவராவது பாதிக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications