கல்யாணம் ஆகாதவருக்கு சாராயம் கொடுத்துகு.க. ஆபரேசன்!!!
கிருஷ்ணகிரி:திருமணம் ஆகாத வாலிபருக்கு பாக்கெட் சாராயத்தை வாங்கிக் கொடுத்து குடும்ப கட்டுப்பாடு செய்த சுகாதார ஆய்வாளரை போலீசார் தேடி வருகிறார்கள்.
கிருஷ்ணகிரியை அடுத்த கெலமங்கலத்தச் சேர்ந்த நெசவுத் தொழிலாளி வெங்கடேஷ் (39). இவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பெங்களூரில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றுள்ளார்.
அப்போது அவரை டாக்டர்கள் பரிசோதித்தபோது அவருக்கு குடும்ப கட்டுப்பாடு ஆபரேசன் செய்யப்பட்டுள்ளதை அறிந்தனர். இதையறிந்து வெங்கடேஷ் அதிர்ந்தார்.
இதையடுத்து ஊர் திரும்பிய வெங்கடேஷ் போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதில்,
2 வருடங்களுக்கு முன்பு எங்கள் ஊரில் சுகாதார ஆய்வாளராக இருந்தவர் எனக்கு பாக்கெட் சாராயம் வாங்கி கொடுத்தார். நானும் நன்றாக குடித்துவிட்டு போதையில் இருந்தபோது என்னை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்.
அங்கு வைத்து எனக்கே தெரியாமல் குடும்பக் கட்டுப்பாடு ஆபரேசன் செய்து விட்டார்.
எனது வாழ்க்கையை பாழாக்கிய அந்த சுகாதார ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்துள்ளார்.
போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவரின் பெயர் வெங்கடேஷூக்கு தெரியாததால், அவரைப் பற்றி சுகாதார நிலையத்தில் விசாரித்து வருகிறார்கள்.
வெங்கடேஷூக்கு ஆதரவாக கிருஷ்ணகிரி மாவட்ட ஜனநாயக இளைஞர் சங்கத்தினரும் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications