தாயைக் கொன்று மகனும் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
விருதுநகர்:விருதுநகர் மாவட்டத்தில் மனைவியை விவாகரத்து செய்ததைத் தட்டிக் கேட்ட தாயைக் கொன்று விட்டு மகனும் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ளது உசிலம்பட்டி கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் சமீபத்தில் தனது மனைவியை விவாகரத்து செய்து விட்டார்.
இதுகுறித்து ரமேஷைத் தட்டிக் கேட்டுள்ளார் அவரது தாயார் புஷ்பம். இதனால், கோபமடைந்த ரமேஷ் நேற்று தனது தாயார் தூங்கிக் கொண்டிருந்தபோது அவரை தலையணையால் முகத்தில் அழுத்திக் கொலை செய்தார். பின்னர் அதே அறையில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இருவரது பிணங்களும் இன்று காலை மீட்கப்பட்டன. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications