டாடா தொழிற்சாலைக்கு எதிராக போராட்டம்:ஜெ களமிறங்குகிறார்- திட்டம் காலி?
சென்னை:நெல்லை-தூத்துக்குடி மாவட்டங்களில் அமையவுள்ள டாடா தொழிற்சாலையை எதிர்ப்பு போராட்டத்தில் குதிக்கப் பேவாதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இங்கு ரூ. 500 கோடி மதிப்பில் டைட்டானியம் டை ஆக்ஸைடு தொழிற்சாலையை அமைக்க டாடா நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்கு இப் பகுதி மணலில் கிடைக்கும் கனிப் பொருட்களே காரணம். இத் திட்டத்துக்காக இப் பகுதியில் உள்ள 12,000 ஏக்கர் நிலங்களை டாடா வாங்கவுள்ளது.
இத் திட்டத்துக்கு அந்தப் பகுதியிலும் பாமக உள்ளிட்ட பிற கட்சிகள் மத்தியிலும் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் ஜெயலலிதா லேட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,
டாடா தொழிற்சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக பேராட்டம் நடத்தப் போவதாகவும், அந்தப் போராட்டத்தை தானே முன்னின்று நடத்தப் போவதாகவும் அறிவித்துள்ளார்.
அதிமுகவுடன் மதிமுக, புதிய தமிழகம் ஆகிய கட்சிகளும் போராட்டத்தில் குதிக்கவுள்ளனர்.
இந் நிலையில் இன்று மதிமுக சார்பில் திருச்செந்தூரில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படுகிறது.
சரத்குமாரும் இத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்.
இதனால் இத் திட்டம் நிறைவேறுமா என்பது சந்தேகமாகியுள்ளது.
எதிர்ப்பு அதிகமானால் முதல்வர் கருணாநிதி இத் திட்டத்தை ஒத்திப் போட வாய்ப்புள்ளது.












Click it and Unblock the Notifications