கொலையில் முடிந்த தெருக்குழாய் சண்டை!
சென்னை:சென்னையில் தெருக்குழாயில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்தது.
சென்னை துரைப்பாக்கத்தைச் சேர்ந்த முருகன் (32)-நாகவல்லி (28) தம்பதியின் வீட்டிற்கு அருகில் மூர்த்தி-வெண்ணிலா தம்பதியினர் வசித்து வருகின்றனர்.
இதில் நாகவல்லிக்கும், வெண்ணிலாவுக்கும் தெருக் குழாயில் தண்ணீர் பிடிப்பது தொடர்பாக சண்டை ஏற்படுவது வழக்கம்.
நாகவல்லி தகராறு செய்வது பற்றி வெண்ணிலா தனது அண்ணன் விஜயகுமாரிடம் கூறியுள்ளார்.
இதைக்கேட்டு கோபமடைந்த விஜயகுமார் தன் தங்கையை கூட்டிக்கொண்டு நாகவல்லியின் வீட்டுக்கு சென்று சண்டை போட்டுள்ளார். வாய்த்தகராறு முற்றி கைகலப்பாக மாறியது.
சண்டையில் முருகன், நாகவல்லி தம்பதியினரை விஜயகுமாரும், வெண்ணிலாவும் கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
முருகன்-நாகவல்லி தம்பதி உயிருக்கு ஆபத்தான நிலையில் பெருங்குடி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி முருகன் இறந்து விட்டார்.
இதையடுத்து வெண்ணிலா, விஜயகுமார் இருவரும் கைது செய்யப்பட்டனர்.












Click it and Unblock the Notifications