போலீஸ் மிரட்டல்- பெண் வக்கீல் மாயம்!கண்டுபிடிக்க கோரி சகோதரி வழக்கு
சென்னை:என்கவுண்டரில் சுட்டுக் கொன்று விடுவதாக போலீஸாரால் மிரட்டப்பட்ட பெண் வக்கீலைக் காணவில்லை. அவரை கண்டுபிடித்துக் கொடுக்கமாறு போலீஸுக்கு உத்தரவிடுமாறு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவரது மூத்த சகோதரி ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்துள்ளார்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கோனூர் கிராமத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் கவிதா.
கடந்த மாதம் 25ம் தேதி உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கை தாக்கல் செய்வதற்காக கவிதா சென்னை வந்தார். அதன் பின்னர் அவரைக் காணவில்லை. ஊருக்கும் திரும்பவில்லை. சென்னையிலும் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை.
இதையடுத்து அவரது சகோதரி அமுதா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு (ஹேபியஸ் கார்பஸ்) மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், சேலம் மாவட்டம் கருமலைக்கூடல் காவல் நிலைய போலீஸார் மீது கவிதா பல்வேறு புகார்களைக் கூறி வந்தார். இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடர்ந்தார். இதையடுத்து அவருக்கும், எனக்கும் கொலை மிரட்டல்கள் வந்தன.
என்கவுண்டரில் சுட்டுக் கொன்று விடுவதாக மிரட்டல்கள் வந்ததால் தனக்குப் பாதுகாப்பு கோரி கடந்த 2005ம் ஆண்டு உயர்நீதிமன்றத்திலும் கவிதா மனு தாக்கல் செய்தார்.
அதன்படி அவருக்கு பாதுகாப்பு வழங்க தமிழக டிஜிபிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து கவிதாவுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டு விட்டது.
இந் நிலையில்தான் கவிதா காணாமல் போயுள்ளார் என்று தனது மனுவில் கூறியிருந்தார் அமுதா.
அமுதாவின் மனுவை பரிசீலித்த உயர்நீதிமன்றம், போலீஸ் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்ததோடு இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
-
கோல்டன் என்ட்ரி கொடுக்கும் 'தங்கப்' பேருந்து.. சென்னை சாலைகளில் இனி 'ராயல்' பயணம்.. சூப்பர் முடிவு! -
ஸ்ட்ரெச்சரில் படுத்தபடி சென்னையில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவன்.. சொல்ல சொல்ல ஆசிரியை எழுதிய விடை -
சென்னையில் புதிய அமெரிக்கத் துணைத் தூதராக மரியானா எல்.நெய்ஷுலர் பொறுப்பேற்பு -
சிங்கப்பூரில் 4000 டாலர் சம்பளம்.. லேடீஸ் ஹாஸ்டல் ஐஸ்வர்யா மாஸ்டர் பிளானில் சிக்கிய பரிதாப பெண்கள் -
"சாப்பாடு கிடையாது”.. சென்னையில் மக்களை அதிரவைத்த ஹோட்டல் அறிவிப்பு பலகை.. கேஸ் தட்டுப்பாட்டால் ஷாக் -
சென்னை மொத்தமாக முடங்கியது.. சிலிண்டர் இல்லாமல் அடுத்தடுத்து மூடப்படும் உணவகங்கள். தவிக்கும் மக்கள் -
சென்னை விடுதிகளில் டீ, காபி கிடையாது.. PG-க்கள் அறிவிப்பு! பேச்சுலர்களுக்கு திண்டாட்டம்தான்! -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
பட்டா காத்திருந்தவர்களுக்கு ஜாக்பாட்.. 5952 மனுக்களில் குட் நியூஸ்.. கோவை, சென்னையில் 24 மணி அதிசயம் -
மின்சார வாரியம் சர்ப்ரைஸ்.. தமிழகத்தில் திடீர்னு ஏறிய கரண்ட் தேவை! உடனே வந்த மின்வாரிய ஹேப்பி நியூஸ் -
சொத்து வரியின் பயன்கள்.. இது எப்படி கணக்கிடப்படுகிறது? வரி கட்டாவிட்டால் ஜப்தி வருமா? அறியாத தகவல் -
கூடுவாஞ்சேரியில் நள்ளிரவில் நடந்த தீவிபத்து! ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உடல் கருகி பலி!












Click it and Unblock the Notifications