Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சங்கரநாராயணன் கோவில் ஆடி தபசு

Subscribe to Oneindia Tamil

சங்கரன்கோவில்:திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள புகழ் மிக்க சங்கரநாராயணன் கோவிலில் ஆடித் தபசு திருவிழா சிறப்புற நடந்தது.

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் அமைந்துள்ளது அருள்மிகு சங்கர நாராயணசாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா கடந்த 19-ம் தேதி தொடங்கியது.

29-ந் தேதி ஆடித் தபசு சிறப்பாக நடந்தது. இதற்கான நிகழ்ச்சிகள் காலையிலேயே தொடங்கின. கோமதியம்மாள், சங்கரலிங்க சுவாமி, சங்கர நாராயணர் ஆகியோருக்கு அபிஷேகமும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.

பின்னர் சுவாமி தங்கச்சப்பரத்தில் எழந்தருளும் நிகழ்ச்சி மாலை 6 மணிக்கு நடைபெற்றது. இதில் அன்னை கோமதியம்மனுக்கு சங்கரலிங்க சாமி, சங்கர நாராயணராக தபசு காட்சியளிக்கும் வைபவம் நடந்தது. பின்னர் இரவிலும் இதே வைபவம் நடைபெற்றது.

இந்த ஆடித்தபசு காட்சியினை காண பல்வேறு மாவட்டங்களிலிருந்து பல ஆயிரக்கனக்கானோர் சங்கரன்கோவிலில் குவிந்தனர்.

தபசு காண வந்த பக்தர்களிடம் நகராட்சி குத்தகைதாரர்கள் சகட்டு மேனிக்கு வசூல் வேட்டை நடத்தி பக்தர்களை சிரமத்திற்குள்ளாக்கினர்.

கோவில் சுற்று பிரகாரத்தில் வாகனங்களை நிறுத்த தேவசம் போர்டு தனி ஏலம் விட்டுள்ளது. ஆனால் நகராட்சி குத்தகைதாரர் வணிக வாகனங்களுக்கு மட்டும்தான் கட்டணம் வசூல் செய்ய வேண்டும். அதை விடுத்து ஊருக்குள் நுழையும் வாகனங்களுக்கெல்லாம் இஷ்டம் போல் முறைகேடான முறையில் கட்டணம் வசூலித்ததாக பக்தர்கள் வேதனை தெரிவித்தனர்.

ஆடித் தபசு விழாவையொட்டி பலத்த பாதுகாப்பு போடபப்ட்டிருந்தது.800-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+