வெள்ளத்தில் மிதக்கும் பீகார்1 கோடி பேர் வீடிழந்து தவிப்பு
Subscribe to Oneindia Tamil
பாட்னா: பீகாரில் பெய்து வரும் தொடர் மழையால் அந்த மாநிலத்தின் பெரும் பகுதி வெள்ள நீரில் மிதந்து வருகிறது. இதுவரை 1 கோடி பேர் வீடுகள், உடமைகளை இழந்து தவித்து வருகின்றனர். 5000க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
![]() |
பீகார் மாநிலத்தில் கடந்த இரண்டு வாரங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. மாநிலத்தில் ஓடும் அனைத்து நதிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
![]() |
இதனால் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 18 மாவட்டங்களில் வெள்ள நீர் புகுந்து பிற பகுதிகளிலிருந்து அவை துண்டிக்கப்பட்டுள்ளன.
5000 கிராமங்கள் மற்றிலும் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. 1.3 கோடி பேர் வரை வீடுகளை இழந்துள்ளனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
மழை, வெள்ளத்தில் சிக்கி 77 பேர் உயிரிழந்துள்ளனர். பல பகுதிகளில் ஹெலிகாப்டர் மூலம் உணவுப் பொட்டலங்கள் போடப்பட்டு வருகின்றன. இருப்பினும் பல பகுதிகளில் உணவு கிடைக்காமல் மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.














Click it and Unblock the Notifications