தேங்காய் உடைத்து இ.கம்யூ போராட்டம்
திருநெல்வேலி:தென்னை விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருவது குறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து தமிழகம் முழுவதும் நடு ரோட்டில் தேங்காய் உடைக்கும் போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தியது.
தமிழ் நாட்டில் சுமார் 12 லட்சம் ஏக்கர் நிலங்களில் தென்னை சாகுபடி நடைபெறுகிறது. மூன்றரை லட்சம் குடும்பத்தினர் தென்னை விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தென்னை சார்ந்த தொழில்கள் மூலம் 5 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் ஆண்டுக்கு வியாபாரம் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
![]() |
தேங்காய் உற்பத்தி அதிகரித்தாலும் விவசாயிகளின் வேதனையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. உழுதவன் கணக்கு பார்த்தால் உலக்கை கூட மிஞ்சாது என்பதைப் போல் இன்று விவசாயிகளின் நிலை உள்ளது.
![]() |
விவசாயிகளின் வாழ்க்கை ஜீவ மரண போராட்டமாக உள்ள நிலையில் மத்திய, மாநில அரசுகள் மேலை நாடுகளிலிருந்து "மாட்டு தீவண புண்ணாக்கு இறக்குமதி" என்ற பெயரில் அந்தந்த நாடுகளில் இருந்து தேங்காய் சக்கையை இங்கு அனுப்பி வைத்து எண்ணெய் பிழிகின்றன.
இதன் மூலம் பெரிய நிறுவனங்கள் கொள்ளை லாபம் அடிக்க உடந்தையாக இருப்பதை கண்டித்து தமிழகமெங்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேங்காய் உடைப்பு போராட்டம் நடைபெற்றது.
மார்க்சிஸ்ட் தொண்டர்கள், தென்னை விவசாயிகள் பெரும் திரளாக கலந்து கொண்டு சாலைகளில் தேங்காய்களைப் போட்டு உடைத்தனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலும் இப்போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் உடைத்தனர்.














Click it and Unblock the Notifications