கர்நாடகம் அணை கட்டவில்லை - மறுக்கிறார் துரைமுருகன்
கடலூர்: தென்பெண்ணை ஆற்றில் கர்நாடக அரசு அணை கட்டுவதாக கூறுவது, சும்மா கிடக்கும் சங்கை ஊதிக் கெடுப்பது போல உள்ளது. அப்படி ஒரு அணையை கர்நாடகம் கட்டவில்லை என்று பொதுப் பணித்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
தென் பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு தடுப்பணை கட்ட முயற்சிப்பதாகவும், அதைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்காமல் உள்ளதாகவும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியிருந்தார்.
![]() |
இதற்கு துரைமுருகன் மறுப்பு தெரிவித்துள்ளார். கடலூரில் நடந்த நீர்ப்பாசனக் கருத்தரங்கில் கலந்து கொண்ட அவர் பேசுகையில்,
கர்நாடக மாநிலம் முகளூர் என்ற இடத்தில் தென்பெண்ணை ஆற்றில் கர்நாடக அரசு தடுப்பணை கட்டிவருவதாக ஜெயலலிதா அறிக்கை விட்டுள்ளார். இதை தமிழக முதல்வர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.
இதுகுறித்து நான் விசாரித்தேன். தமிழக எல்லையில் இருந்து 7 கிமீ தொலைவில் உள்ளது முகளூர். இங்கு ஆற்றில் உள்ள தரைப்பாலம் மூழ்கியுள்ளது. அந்த இடத்தில் பாலம் கட்டலாமா என்பது தொடர்பாக கர்நாடகா அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
ஆனால் ஜெயலலிதா என்ன நடக்கிறது என்றுகூட தெரியாமல் கண்ணை மூடிக்கொண்டு வாய்க்கு வந்தபடி அறிக்கை விடுவது அர்த்தமற்றது. ஜெயலலிதா செய்யும் வேலைகள் எல்லாம், "சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்தானாம் ஆண்டி" என்ற கதையாக, தவறான தகவல்களை கொடுத்து அரசுக்கு எதிராக தமிழக மக்களை தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பது போல உள்ளது என்றார் துரைமுருகன்.













Click it and Unblock the Notifications