For Daily Alerts
Just In
கோவை குண்டுவெடிப்பு: மேலும் 15 பேருக்கு ஜாமீன்
கோவை:கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட மேலும் 15 பேருக்கு இன்று நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.
கோவை குண்டுவெடிப்பு வழக்கில் 158 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர். கேரள மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானி உள்ளிட்ட 8 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
இதையடுத்து குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 105 பேர் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தனர். இவர்களில் 9 பேருக்கு நேற்று வரை ஜாமீன் அளிக்கப்பட்டது.
இன்று மற்றவர்களின் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டன. இறுதியில் மேலும் 15 பேருக்கு இன்று நீதிபதி உத்திராபதி நிபந்தனை ஜாமீன் அளித்து உத்தரவிட்டார்.
Comments
Story first published: Tuesday, May 8, 2007, 5:30 [IST]