சேலம்-நடுரோட்டில் அரவாணிகள் நிர்வாண சண்டை!

Subscribe to Oneindia Tamil

சேலம்:மிஸ் கூவாகம் பட்டம் வென்ற ரசிகா உள்ளிட்ட அரவாணிகள், சேலம் பஸ் நிலையப் பகுதியில் கட்டிப்புரண்டு நிர்வாண கோலத்தில் சண்டை போட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் நகரில் வர வர அரவாணிகள் தொல்லை அதிகரித்து வருகிறது. பஸ் நிலையப் பகுதியில் இரவில் யாரும் நடமாடக் கூட முடியவில்லை. கூட்டம் கூட்டமாக வலம் வரும் அரவாணிகள், ஆண்களை முற்றுகையிட்டு விபச்சாரத்திற்குக் கூப்பிடுவதும், வராதவர்களை கும்பலாக சேர்ந்து அடித்து உதைத்துப் பணம், கடிகாரம், நகைகளைப் பிடுங்கிக் கொண்டு விரட்டுவதும் அதிகரித்து வருகிறது.

Eunuchs complaining to police

சமீபத்தில் கூட சில அரவாணிகள் பெண் போலீஸ் ஒருவரை ஓட ஓட விரட்டி அடித்து நொறுக்கிய சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்டபோது அங்கும் அவர்கள் பெரும் ரகளையில் ஈடுபட்டனர்.

இந் நிலையில் நடு ரோட்டில் கட்டிப்புரண்டு நிர்வாண கோலத்தில் அரவாணிகள் பெரும் ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.

சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் நவ்யா, மைதிலி, பிரியா ஆகிய 3 அரவாணிகள் வசித்து வருகின்றனர். நேற்று மதியம், இந்த மூன்று அரவாணிகளைத் தேடி வேறு பகுதியைச் சேர்ந்த 6 அரவாணிகள் வந்தனர்.

9 பேருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இது சண்டையாக மாறியது. ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர்.

அப்போது அடி தாங்க முடியாமல் பிரியா, மைதிலி, நவ்யா ஆகியோர் ரோட்டுக்கு ஓடி வந்தனர்.

ரவுண்டானா பகுதியில் அவர்கள் மூன்று பேரும் ஓடினர். ஆனால் மற்ற 6 அரவாணிகளும் அவர்களைத் துரத்தி வந்து பிடித்து கடுமையாக தாக்கினர்.

Eunuch Rasika

ஒரு அரவாணியின் சேலையையும் கழற்றி எறிந்து அவரை நிர்வாணப்படுத்தினர்.

இதைப் பார்த்து அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர். பெண்கள் அலறி அடித்து ஓடினர். ஆண்களுக்கோ, எப்படி போய் விலக்கி விடுவது என்ற பயம்.

இந்த சமயம் ஒருவர் பாவாடையை எடுத்துக் கொண்டு வந்து நிர்வாணமான அரவாணியிடம் கொடுத்து அவரது மானத்தைக் காப்பாற்ற உதவினார். அரவாணிகளின் இந்த அராஜக ரகளையால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போலீஸாருக்குத் தகவல் போய் அவர்கள் விரைந்து வந்தனர். அத்தனை அரவாணிகளையும் ஜீப்பில் போட்டுக் கொண்டு காவல் நிலையம் சென்றனர்.

காவல் நிலையத்தில் பிரியா, மைதிலி, நவ்யா ஆகியோர் அழுதுகொண்டே போலீஸாரிடம் கூறுகையில்,

நாங்கள் அமைதியான முறையில் வாழ்ந்து வருகிறோம். ஆனால் எங்களை விபச்சாரத்தில் ஈடுபடுமாறு, அந்த ஆறு பேரும் வற்புறுத்தினர். அதனால்தான் இந்த சண்டை நடந்தது என்றனர்.

ஆனால் மற்ற 6 பேரும் இதை மறுத்துள்ளனர். பஸ் நிலையத்தில் பொதுமக்களிடையே அரவாணிகளுக்கு கெட்ட பெயர் வரும்படி நடந்து கொள்ளாதீர்கள் என்றுதான் அவர்களுக்கு அறிவுரை கூறினோம். நாங்கள் அவர்களை அடிக்கவில்லை என்று அவர்கள் கூறியுள்ளனர்.

3 பேரையும் தாக்கியதாக கூறப்படும் ரசிகா, மோனிஷா, பூஜா, சுவாதி, பிரியா, ராதிகா ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். அவர்கள் மீது கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான மிஸ். ரசிகா சமீபத்தில் கூவாகத்தில் நடந்த மிஸ் கூவாகம் போட்டியில் அழகு ராணியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+