பெற்ற மகள்களை 6 வருடங்களாககற்பழித்த காமக் கொடூரன் கைது
அய்ஸ்வால்:பெற்ற மகள்களை கடந்த 6 வருடங்களாக கற்பழித்து வந்த காமக் கொடூரனை மிஸோரம் போலீஸார் கைது செய்துள்ளனர்.
கொலசிப் என்ற இடத்தில்தான் இந்த அக்கிரமம் நடந்துள்ளது. இதுகுறித்து மிஸோரம் மாநில மகளிர் அமைப்பின் கொலசிப் கிளையினர்தான் இந்த கொடூரத்தைக் கண்டுபிடித்து வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளனர்.
இதுகுறித்து அந்த மகளிர் அமைப்பின் பிரதிநிதி கூறுகையில், லால்ரோபியாங்கா என்கிற அந்த நபர் கடந்த ஆறு வருடங்களாக தனது இரு மகள்களையும் கற்பழித்து வந்துள்ளார். அவருக்கு வயது 44 ஆகிறது.
அவருடைய இளைய மகள் (வயது 7), தனது தோழிகளிடம், எங்கள் தந்தை எப்போதும் இரவில் எங்களோடுதான் தூங்குவார். என் அக்காவிடம் உடலுறவு கொள்வார். எனக்கும் பாலியல் தொல்லை கொடுத்து வருவதாகவும் சொல்லியுள்ளார்.
இந்தத் தகவல் எங்களுக்குத் தெரிய வர, நாங்கள் போலீஸுக்குத் தகவல் கொடுத்தோம். போலீஸார் அந்த நபரைக் கைது செய்தனர்.
போலீஸாரிடம் தனது மகள்களைக் கற்பழித்ததை லால்ரோபியாங்கா ஒத்துக் கொண்டார்.
இந்த விகார விவகாரம் குறித்து லாலின் மனைவியும், மூத்த மகளும் எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால் இளைய மகள் மூலம் விஷயம் வெளிச்சத்திற்கு வந்து விட்டது என்றார்.
குழந்தைகள் நல மேம்பாட்டு வாரியத்தின் உறுப்பினரான லாலெங்ரவ்லி சாலியோ கூறுகையில், எங்களுக்கு வரும் 90 சதவீத கற்பழிப்பு புகார்கள் எல்லாம் ஒரு குடும்பத்துக்குள்ளேயே நடப்பவையாகதான் இருக்கிறது என்ற அதிர்ச்சி தரும் தகவலையும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications