சோனியா வருகை-ராமேசுவரம் கடல் பகுதியில்3 போர் கப்பல்கள் கண்காணிப்பு

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்:அகல ரயில் பாதையை துவக்கி வைக்க வரும் ஆகஸ்ட் 12ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வருவதையொட்டி ராமேஸ்வரம் கடல் பகுதியில் 3 போர் கப்பல்கள் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

மானாமதுரை-ராமேசுவரம் இடையிலான அகல ரயில் பாதையை துவக்கி வைக்க சோனியா ராமேசுவரம் வருகிறார்.

பாம்பன் கடல் பகுதியின் மீது இருந்த மீட்டர் கேஜ் ரயில் பாதை அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்ச்சியில் பங்கேற்க சோனியாவுடன், ரயில்வே அமைச்சர் லாலு, தமிழக முதல்வர் கருணாநிதி மற்றும் முக்கிய தலைவர்கள் வரவுள்ளனர்.

இதையடுத்து ராமேசுவரத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முக்கியமாக அகதிகள் முகாம்களில் போலீசார் குவிக்கப்பட்டு, அகதிகளின் நடமாட்டத்தை கண்காணிக்கப்படுகிறது.

மேலும் சிறிய ரோந்து படகுகளிலும் கடற்படை வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பாக்ஜலசந்தி மற்றும் பாக் வளைகுடா பகுதியில் கடற்படையின் 3 போர்க் கப்பல்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளன.

கடலிலும், தரையிலும் செல்லக்கூடிய ஹோவர்கிராப்ட் படகும் ரோந்து பணியில் இறங்கியுள்ளது.

இதுகுறித்து தெற்குப் பகுதி கடற்படை ரியா கமாண்டர் பர்மன் கூறுகையில்,

கடலோர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து வீரர்களும் 24 மணி நேரமும் விழிப்போடு இருக்கும்படி உஷார் படுத்தப்பட்டுள்ளனர் என்றார்.

ராமேஸ்வரம் தவிர தொண்டி, ஜெகதாபட்டினம், நாகப்பட்டினம், கோடியக்கரை, தோப்புத்துறை ஆகிய கடல் பகுதிகளும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+