கோவை சிஆர்பிஎப் பயிற்சி கல்லூரியில்கிரனைட் வெடித்து 10 பேர் காயம்
Subscribe to Oneindia Tamil
கோயம்புத்தூர்:கோவையில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் பயிற்சிக் கல்லூரியில் கிரனைட் குண்டு வெடித்துச் சிதறியதில் 10 வீரர்கள் காயமடைந்தனர். இதில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
குருதம்பாளையத்தில் உள்ள இந்தக் கல்லூரியில் இன்று காலை 5 சிஆர்பிஎப் வீரர்கள் ரைபிள் கிரைனட் குண்டுகளை கையாளும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அவர்களுடன் 5 பயிற்சியாளர்களும் இருந்தனர்.
அப்போது ஒரு குண்டு திடீரென வெடித்துச் சிதறியது. இதில் 5 காவலர்களும் 5 பயிற்சியாளர்களும் காயமடைந்தனர். இதில் இருவருக்கு மிக பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக இக் கல்லூரியின் டிஐஜி ஜார்ஜ் பிரான்சிஸ் தெரிவித்தார்.
இதில் பரூவா என்ற வீரருக்கு வயிற்றில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. பால் என்பவருக்கு தலையில் குண்டுத் துகள்கள் பாய்ந்துள்ளன.












Click it and Unblock the Notifications