ராகிங்: மாணவர்களை தாக்கிய அதிமுக புள்ளி!
சங்கரன்கோவில்:ராகிங் செய்த மாணவருக்கு ஆதரவாக கல்லூரி விடுதிக்குள் நள்ளிரவில் நுழைந்து மாணவ, மாணவிகள் மீது தாக்குதல் நடத்திய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
சங்கரன்கோவில் அருகே மலையடிக்குறிச்சி என்ற பகுதியில் அறிஞர் அண்ணா கலைக் கல்லூரி உள்ளது.
இக்கல்லூரியில் கடந்த மாதம் முதலாம் ஆண்டு மாணவர்களை சில சீனியர் மாணவர்கள் ராகிங் செய்துள்ளனர். கல்லூரியின் முதல்வர் ராமையா தலையீட்டு மாணவர்களை கண்டித்து எச்சரித்துள்ளார்.
இந் நிலையில் செல்லக்குமார் என்ற மாணவர், முத்துக்குமார் என்ற மாணவரை மிரட்டியதாக கூறப்படுகிறது.
இது குறித்து முதல்வரும் நிர்வாகியுமான ராமைய்யாவிடம் முத்துக்குமார் புகார் செய்தார். அவரும் செல்லக்குமாரை அழைத்து கண்டித்துள்ளார்.
இந்தப் பகுதியின் அதிமுக பிரமுகரான செந்தூர் பாண்டியன் ராகிங் செய்த செல்லக்குமாருக்கு ஆதரவாக கல்லூரி முதல்வரிடம் சண்டை போட்டு வாக்குவாதம் செய்தார்.
இந் நிலையில் நேற்று நள்ளிரவு இந்தக் கல்லூரிக்குள் 11 பேர் கொண்ட கும்பல் நுழைந்து மாணவர்களை கண்மூடித்தனமாக தாக்கியது. இதையடுத்து மாணவ, மாணவிகள் அலறியடித்து ஓடினர்.
இது குறித்து ராமைய்யா புளியங்குடி போலீஸில் புகார் செய்தார்.
போலீஸார் அதிமுக புள்ளியான செந்தூர் பாண்டியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இத் தாக்குதலில் ஈடுபட்ட செல்லப்பாண்டி, சாமித்துரை, சுரேஷ்குமார், முத்துபாண்டியன், சரவணக்குமார், சுரேஷ், தலச்செல்வம், அமிர்த பாண்டி, நாகதுரை, பூதப்பாண்டி உள்பட 11 பேரை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications