சக்தியின் ஆதரவு எனக்கு உள்ளதுபிரதமராக நீடிப்பேன் - சொல்கிறார் மன்மோகன்
டெல்லி:உயர்ந்த சக்தியின் ஆதரவு எனக்கு உள்ளது. அந்த சக்தியின் விருப்பப்படி நான் பிரதமராக நீடிப்பேன் என்று கூறியுள்ளார் பிரதமர் மன்மோகன் சிங்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒருங்கிணைப்பாளரும், சமதாக் கட்சியின் தலைவருமான ஜார்ஜ் பெர்னாண்டஸ், அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக பிரதமரை கடுமையாக விமர்சித்துப் பேசியிருந்தார். தனது பேச்சில், இதுவே சீனாவில் ஒரு பிரதமர் இப்படி நடந்திருந்தால் ஒரு தோட்டாவைக் கொண்டு நெற்றியில் சுட்டுக் கொன்றிருப்பார்கள் என்று கோபமாக கூறியிருந்தார் அவர்.
பெர்னாண்டஸின் பேச்சு நேற்று நாடாளுமன்றத்தில் பெரும் அமளியை ஏற்படுத்தியது. காங்கிரஸ் எம்.பிக்கள், பெர்னாண்டஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரி அமளியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் நேற்று தொலைக்காட்சி ஒன்றுக்கு மன்மோகன் சிங் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், நான் பிரதமராக நீடிப்பதை எதிர்க்கட்சிகள் விரும்பவில்லை. சிலர் எனது சாவைக் கூட விரும்புகிறார்கள்.
ஆனால் உயர்ந்த சக்தியின் ஆதரவு எனக்கு உள்ளது. அந்த சக்தியின் விருப்பப்படி, எதிர்க்கட்சிகள் விரும்பாவிட்டாலும் நான் பிரதமர் பதவியில் நீடிப்பேன். அந்த தைரியமும், நம்பிக்கையும் எனக்கு உள்ளது.
எதிர்க்கட்சிகளின் போக்கும், மனோ பாவும் எனக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. எனது சாவுக்காக யாகம் கூட நடத்துகிறார்கள் என்றார் மன்மோகன் சிங்.
உயர்ந்த சக்தி என்று பிரதமர் குறிப்பிட்டிருப்பது சோனியா காந்தியைத்தான் என்று தெரிகிறது.
இதற்கிடையே, தனது சாவுக்காக எதிர்க்கட்சியினர் யாகம் நடத்தி வருவதாக பிரதமர் கூறியிருப்பது குறித்து பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் எம்.பி. வி.கே.மல்ஹோத்ரா கூறுகையில், இப்படிப்பட்ட பிரதமர் ஒருவரை இந்த நூற்றாண்டிலேயே பார்த்ததில்லை. யாகம் நடத்துவது என்பது ஒருவர் நலமாக இருக்க வேண்டும் என்று வேண்டித்தான். சாக வேண்டும் என்று கோரி யாரும் யாகம் நடத்த மாட்டார்கள்.
யாகம் நடத்த ஏற்பாடு செய்தவர்கள் யார் என்பதை பிரதமர் சொல்ல வேண்டும். அதை விடுத்து இப்படி அவதூறான, பொய்யான புகாரை அவர் சொல்லக் கூடாது என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications