For Quick Alerts
For Daily Alerts
Just In
தஸ்லிமா விசா: மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு
டெல்லி:
சர்ச்சைக்குரிய வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினின் விசாவை மேலும் 6 மாதங்களுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது.
வங்கதேசத்தைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் தஸ்லிமா தான் எழுதிய லஜ்ஜா என்ற நாவலால் வங்கதேச முஸ்லீம்களின் கடும் கண்டனத்துக்கு ஆளானார். அவருக்கு எதிராக முஸ்லீம் அடிப்படைவாதிகள் போர்க்கொடி உயர்த்தியதால் வங்கதேசத்திலிருந்து அவர் வெளியேறினார்.
இந்தியாவில் அடைக்கலம் புகுந்துள்ள அவருக்கு தற்போது இங்கும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. சமீபத்தில் ஹைதராபாத்தில், மஸ்ஜிலிஸ் இ இத்தாஹுல் முஸ்லிமீன் என்ற அமைப்பைச் சேர்ந்த 3 எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோர் தஸ்லிமாவைத் தாக்கினர்.
இந்த நிலையில், அவரது விசாவை மேலும் 6 மாதங்களுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது. நேற்று முதல் பிப்ரவரி 17ம் தேதி வரைக்கும் அவரது விசா நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நிரந்தர குடியுரிமை கோரி தஸ்லிமா மத்திய அரசிடம் விண்ணப்பித்துள்ளார். இருப்பினும் அவரது விசாவை மட்டும் நீட்டித்து மத்திய அரசு முடிவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments
Story first published: Saturday, May 19, 2007, 5:30 [IST]