இ.கம்யூ பிரமுகர் கொலை: குற்றவாளிகளை கைதுசெய்ய நல்லகண்ணு கோரிக்கை
திருநெல்வேலி:நெல்லை மாவட்டம் அரிகேசவநல்லூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் பெருமன்ற செயலாளர் கொலை வழக்கில் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆர்.நல்லகண்ணு கோரியுள்ளார்.
திருநெல்வேலி மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் பெரு மன்ற செயலாளர் சுடலைமுத்து என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு அரிகேசவநல்லூர் என்ற கிராமத்தில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
சுடலைமுத்துவின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற நல்லகண்ணு, சட்ட மன்ற உறுப்பினர்கள் பத்மாவதி, உலகநாதன் உள்ளிட்டோர் வந்திருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் நல்லகண்ணு பேசுகையில்,
மக்கள் பிரச்சனைக்காக பாடுபட்ட எங்கள் கட்சியின் இளைஞர் பெருமன்ற பொறுப்பாளர் சுடலைமுத்து வெட்டி படுகொலை செய்யப்பட்டது கண்டனத்துக்குரியது.
கொலையாளிகளை இதுவரை காவல்துறையினர் கைது செய்யவில்லை. இதனால் இப்பகுதி பொது மக்கள் பெரும் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும். சுடலைமுத்து குடும்பத்திற்கு அரசு உடனடியாக நிதி வழங்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications