சிங்கப்பூரில் புதியநிலா தொகுப்பு நூல் வெளியீடு

Subscribe to Oneindia Tamil

சிங்கப்பூர்: புதியநிலா மாத இதழின் பத்தாமாண்டு தொகுப்புநூல் வெளியீட்டு விழா சிங்கப்பூரில் நடைபெற்றது.

தமிழறிஞர் டாக்டர் சுப.திண்ணப்பன் தலைமையில் நடந்த விழாவுக்கு மா.அன்பழகன் மற்றும் எம்.ஒய்.முஹம்மது ரஃபீக் முன்னிலை வகிக்க, திரு எம். இலியாஸ் வரவேற்புரை நிகழ்த்தினார்.


கவிஞர் திரு. இக்குவனம், தொகுப்பாசிரியர் திரு. ஜஹாங்கீர் அவர்களைப் பாராட்டி அந்தாதி வெண்பா பாடினார்.

தொலைக்காட்சிப் படைப்பாளர் திரு அ.முகம்மது அலி , சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழக ஆங்கில விரிவுரையாளர் டாக்டர் சித்ரா சங்கரன், பன்னூலாசிரியர் டாக்டர் ஹிமானா சையத் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

புதியநிலா பத்தாமாண்டு நிறைவு தொகுப்பு மலரை வெளியிட்டு திராவிடர் கழகத் தலைவர் டாக்டர் கி.வீரமணி சுமார் ஒரு மணி நேரம் நூலின் நயங்களைச் சுவையுடன் விரித்துரைத்தார்.


சிங்கப்பூர் எம்.இ.எஸ். உரிமையாளர் ஹாஜி அப்துல் ஜலீல், ஜமால் கஜூரா உரிமையாளர் ஹாஜி ஜமால் முஹம்மது ஆகியோர் முதல் பிரசுரத்தைப் பெற்றுக் கொண்டனர்.

புதியநிலா இதழின் நிறுவனரும், சிறப்பாசிரியரும் சிறப்பு மலரின் தொகுப்பாசிரியருமான திரு மு.ஜஹாங்கீர் ஏற்புரை நிகழ்த்தினார்.

கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ நிகழ்ச்சிகளை கவித்துவமாய்த் தொகுத்து வழங்கிய அவ்விழாவில் சிங்கப்பூர் கவிச்சோலை மற்றும் கவிமாலைக் கவிஞர்கள் ஆறுபேர் புதியநிலா என்ற தலைப்பில் கவிதை பாடியமைக்காக நினைவுப் பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

சிங்கப்பூரின் முன்னணி பத்திரிக்கையாளர்கள், படைப்பிலக்கியவாதிகள், தமிழறிஞர்கள், வணிகர்கள், பிரமுகர்கள் ஆகியோர் பெருந்திரளாக கலந்துகொண்ட அவ்விழா ஓர் இலக்கியச் சங்கமமாகத் திகழ்ந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+