தூத்துக்குடியில் கார்களை நொறுக்கிய மர்ம கும்பல்!
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி:தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் பிரச்சனைகளுக்கு பஞ்சமேயில்லை போலிருக்கிறது. தூத்துக்குடியில் நேற்று நள்ளிரவு மர்மக் கும்பல் ஒன்று 20க்கும் மேற்பட்ட கார்களை உடைத்து நொறுக்கியுள்ளது.
தூத்துக்குடி மட்டக்கடை பஜாரில் அப்பகுதியில் இருப்பவர்கள் தங்கள் கார்களை வீட்டிற்குள் இடமில்லாததால் தெருவில் தான் நிறுத்துவார்கள்.
நேற்று நள்ளிரவு நேரத்தில் அடையாளம் தெரியாத மர்ம கும்பல் ஒன்று மட்டக்கடை பஜாரில் நின்றிருந்த 20க்கும் மேற்பட்ட கார்களை அடித்து நொறுக்கியுள்ளது. அப்பகுதி மக்கள் கார்களை உடைக்கும் சத்தம் கேட்டு வந்தவுடன் மர்ம கும்பல் தப்பி ஓடிவிட்டது.
இதுகுறித்து கார்களின் உரிமையாளர்கள் மொத்தமாக போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications