மனைவி, 3 மகள்களை கொன்று விட்டுமகனுடன் தப்பியவருக்கு வலைவீச்சு!
Subscribe to Oneindia Tamil
ராஜ்நந்த்கோவன் (சட்டீஸ்கர்): சட்டீஸ்கர் மாநிலத்தில் கடன் தொல்லையால் மனைவி, மற்றும் 3 மகள்களை கொன்ற நபர், தனது மகனை மட்டும் தூக்கிக் கொண்டு தப்பி ஓடி விட்டார்.
சட்டீஸ்கர் மாநிலம், முடிப்பர் கிராமத்தை சேர்ந்தவர் ராம்விலாஸ். இவர் பலரிடம் கடன் வாங்கியுள்ளாராம். கடன் கொடுத்தவர்கள் கொடுத்த பணத்தை கேட்டு நெருக்கடி கொடுத்ததால், என்ன செய்வது என்று தெரியாமல், தனது மூன்று மகள்களையும், மனைவியையும் கத்தியால் குத்தி கொலை செய்து விட்டார்.
பின்னர் தனது 8 வயது மகனை தூக்கிக் கொண்டு தப்பி விட்டார். தலைமறைவாக உள்ள அவரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications