மதுரையில் கன மழை-திரும்பிப் போன விமானம்
மதுரை:மதுரையில் பெய்த கன மழையால் சென்னையிலிருந்து மதுரை சென்ற விமானம் தரையிறங்க முடியாமல் மீண்டும் சென்னைக்கு திரும்பியது.
சென்னையில் இருந்து நேற்று இரவு 8.00 மணிக்கு பாராமவுண்ட் ஏர்வேஸ் விமானம் 27 பயணிகளுடன் மதுரைக்கு புறப்பட்டது. மதுரையை அடைந்தவுடன் விமானத்தை தரையிறக்க விமானிகள் முயற்சித்தனர்.
ஆனால், அங்கு பெய்து கொண்டிருந்த கன மழையால் விமானிகளுக்கு ஓடு பாதை தெரியவில்லை.
இதனால் வெகுநேரம் வானில் வட்டமடித்தும் விமானத்தை தரையிறக்க முடியாமல் மீண்டும் சென்னைக்கே விமானத்தைத் திருப்பினர். இரவு 9.30 மணிக்கு சென்னை திரும்பிய அந்த விமானத்தில் இருந்த பயணிகள் விமானத்திற்குள்ளே உட்கார வைக்கப்பட்டனர்.
மதுரையில் மழை நின்றதையடுத்து இரவு 10.20 மணிக்கு விமானம் மீண்டும் மதுரைக்கு புறப்பட்டுச் சென்றது. அங்கிருந்து 35 பயணிகளை ஏற்றிக்கொண்டு இரவு 12.30 மணியளவில் மீண்டும் சென்னை திரும்பியது பாராமவுண்ட் ஏர்வேஸ் விமானம்.












Click it and Unblock the Notifications