ஜெவுக்கு அரசியல் நாகரீகம் வேண்டும்: வாசன்
மதுரை:பிரதமர் மற்றும் அரசியல் தலைவர்களை விமர்சிப்பதில் ஜெயலலிதா அரசியல் நாகரீகத்தை கடைபிடிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
மதுரை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற கே.எஸ்.கே.ராஜேந்திரனின் அலுவலகத்தை வாசன் திறந்து வைத்தார்.
பின்னர் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர், சோனியா காந்தி மற்றும் அனைத்து கூட்டணி கட்சித் தலைவர்கள், நாட்டின் வருங்கால வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்க நினைக்கிறார்கள. ஆனால் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்திற்கு இடைத்தேர்தல் வரும் என்று பகல் கனவு காண்கிறார்கள்.
சென்னை சத்தியமூர்த்தி பவனுக்கு முதல்வர் கருணாநிதி வந்தபோது, நாடாளுமன்ற கூட்டம் நடந்ததால் மத்திய அமைச்சர்கள் இயலவில்லை. பழைய மாமல்லபுரம் சாலைக்கு முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி பெயரை சூட்டிய முதல்வருக்கு நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ராமர் பால பிரச்சனையை பாஜகவும், அதன் ஊதுகுழலாக செயல்படும் கட்சிகளும் அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்துகின்றன.
பிரதமரையும் மற்ற தலைவர்களையும் விமர்சிக்கும்போது அரசியல் நாகரீகத்தை ஜெயலலிதா கடைபிடிக்க வேண்டும். அதை மீறும்போது, கண்டிக்க வேண்டியது கடமையாகிறது என்றார்.












Click it and Unblock the Notifications