For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரூ. 7,000 லஞ்சம் வாங்கிய சார் பதிவாளர் கைது

By Staff
Google Oneindia Tamil News

தென்காசி:அலுவலகத்தில் வைத்தே ரூ. 7000 லஞ்சம் வாங்கிய சார்பதிவாளரை போலீஸார் கைது செய்தனர்.

தென்காசி சப்-கலெக்டர் அலுவலகம் அருகே 2-ம் சார் பதிவாளர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் சார் பதிவாளராக ராஜபாளையம் கட்டபொம்மன் நகரைச் சேர்ந்த சந்தான மாரிமுத்து என்பவர் பணிபுரிந்து வருகிறார்.

இவரிடம் செங்கோட்டையை சேர்ந்த, ரியல் எஸ்டேட் நடத்தி வரும் காந்தி செல்வம் என்பவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 6 பத்திரங்களைப் பதிவு செய்துள்ளார். அதில் அரசு அறிவித்த சமாதான் திட்டத்தின் கீழ் பத்திர மதிப்பைக் குறைக்க பணம் கட்ட சென்றுள்ளார்.

அப்போது அவரிடம் சந்தான மாரிமுத்து ரூ.25 ஆயிரம் தந்தால்தான் மதிப்பைக் குறைத்து தருவேன் என்று கூறியதைத் தொடர்ந்து காந்தி செல்வம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

அதன்படி நேற்று மதியம் 1 மணியளவில் ரூ.7 ஆயிரத்தை சார்பதிவாளரிடம் கொடுத்தார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X