பள்ளி கிணற்றில் விழுந்து மாணவர் சாவு:எச்.எம்.முக்கு 1 ஆண்டு சிறை
சங்கரன்கோவில்:பள்ளிக்கூட கிணற்றில் மாணவன் விழுந்த சம்பவம் தொடர்பாக, அலட்சியமாக இருந்ததற்காக அப்பள்ளியின் தலைமை ஆசிரியைக்கு 1 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலை அடுத்து குருவிகுளம் அருகேயுள்ள சிதம்பராபுரத்தில் ஆர்.சி நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது.
இங்கு அதே ஊரை சேர்ந்த இசக்குமுத்து மகன் மாரிமுத்து 8-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 2004-ம் ஆண்டு மாரிமுத்து பள்ளி வாளகத்தில் உள்ள கிணற்றில் தவறி விழுந்து பலியானார்.
இதையடுத்து மாணவர்கள் நலன் குறித்து அஜாக்கிரத்தையாக செயல்பட்டதாக பள்ளி தலைமையாசிரியை லூர்து மேரி மீது சங்கரன்கோவில் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி தலைமை ஆசிரியைக்கு ஒரு ஆண்டு சிறையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
மாணவன் கிணற்றில் விழுந்து இறந்த சம்பவம் தொடர்பாக தலைமை ஆசிரியைக்கு ஒரு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருப்பது நெல்லை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications