மீண்டும் வேண்டும் பொடா- அதிமுக கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

டெல்லி:மீண்டும் பொடா சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என அதிமுக கோரிக்கை விடுத்துள்ளது.

ஹைதராபாத் குண்டுவெடிப்பு குறித்து மாநிலங்களவையில் நடந்த விவாதத்தில் அதிமுக எம்பி மைத்ரேயன் பேசுகையில்,

மத்திய அரசுக் கூட்டணிக்கு கடந்த ஒரு வாரமாக (இடதுசாரிகளால்) நிலவி வந்த அச்சுறுத்தல் நீங்கிவிட்டதாகத் தெரிகிறது. ஆனால் தீவிரவாதிகளால் இந்த நாட்டுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் நீங்கவில்லை. மாறாக, அவை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டுள்ளன.

மத்திய அரசு வேண்டுமானால் பாதுகாப்பாக இருக்கலாம். ஆனால் நாடும், மக்களும் பாதுகாப்பாக இல்லை.

தினமும் ஏதாவது நகரில் குண்டு வெடிப்பு, பலர் பலியாதல் என்பது வாடிக்கையாகிவிட்டது. இதற்கு பிரதமரும் உள்துறை அமைச்சரும் கண்டனம் தெரிவிப்பதும், மக்கள் அமைதி காக்கும்படி வேண்டுகோள் விடுப்பதும், பங்கரவாதிகளுக்கு எச்சரிக்கை விடுப்பதும் வழக்கமாகி விட்டது.

பங்கரவாத தாக்குதல்களுக்கு இது மனசாட்சியில்லாத பதில். ஹைதராபாத்தில் தாக்குதல் நடக்கும் என்பது முன்கூட்டியே தெரியும் என்கிறார் உள்துறை அமைச்சர். ஆனால், எப்போது, எங்கு, யாரால் தாக்குதல் நடக்கும் என்பது தெரியாமல் போனது வேதனை.

எங்கு தாக்குதல் நடத்தப் போகிறோம் என்று பங்கரவாதிகள் ப்ளூ பிரின்ட் போட்டு தன்னிடம் தந்துவிட வேண்டும் எதிர்பார்க்கிறதா மத்திய அரசு?.

இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு கடந்த மூன்று ஆண்டுகளில் நாடு முழுவதும் நடைபெற்ற பங்கரவாத சம்பவங்கள் குறித்து வெள்ளை அறிக்கையை அரசு தாக்கல் செய்ய வேண்டும். எத்தனை பேர் கைது செய்யப்பட்டனர், என்ன தண்டனை அளிக்கப்பட்டது என்பது குறித்து விளக்கம் தர வேண்டும் வேண்டும்.

பொடா சட்டத்தை ரத்து செய்ததால் தான் நாட்டிற்கு இவ்வளவு கேடுகளும் ஏற்படுகின்றன. எனவே, பொடா சட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்றார் மைத்ரேயன்.(வைகோ பார்த்து இருப்பது நல்லது)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+