உருண்டு புரண்டு கவுன்சிலர் நூதனப் போராட்டம்!
செங்கோட்டை:நெல்லை மாவட்டம் கடையநல்லூர் நகராட்சியில் தனது வார்டு புறக்கணிக்கப்படுவதாக கூறி சுயேச்சை கவுன்சிலர் நகராட்சி அரங்கத்திற்குள் உருண்டு புரண்டபடி நூதனப் போராட்டம் நடத்தினார்.
நெல்லை மாவட்டம் கடையநல்லூர் நகராட்சி கூட்டம் தலைவர் இப்ராகிம் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் 15-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்துக் கொண்டனர்.
கூட்டம் தொடங்கிய உடன் 4-வது வார்டு சுயோட்சை உறுப்பினர் சீதாராமன் எழுந்து தனது வார்டு முழுமையாக புறக்கணிக்கப்பட்டு வருவதாக கூறி தின கூட்ட அரங்கத்தினுள் நிர்வாகத்தை கண்டித்து தரையில் அங்கும் இங்குமாக உருண்டு...புரண்டு போராட்டம் நடத்தினார்.
சுயேச்சை கவுன்சிலரின் நூதனப் போராட்டத்தால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், செங்கோட்டை நகராட்சி கூட்டத்தில் திமுக நகர் மன்ற தலைவர் ரகீம் கடந்த கூட்டத்தின் போது திமுக கவுன்சிலரை தரக் குறைவாக பேசியதை கண்டித்து திமுக கவுன்சிலர்கள் அப்துல் காதர், பாஞ்ச் பீர், கல்யாணி, காங் உறுப்பினர் ராமலெட்சுமி ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.
ஆனால் நகராட்சித் தலைவருக்கு ஆதரவு தெரிவித்து அதிமுக கவுன்சிலர்கள் கூட்டத்திலிருந்து வெளிநடப்புச் செய்யாமல் உள்ளேயே இருந்தனர்.












Click it and Unblock the Notifications