ஜெ விற்க முயன்ற தொழிற்சாலை-துரைமுருகன்
சென்னை:காட்பாடி வெடிமருந்து தொழிற்சாலையை காக்க வேண்டும் என்று அறிக்கை விட ஜெயலலிதாவுக்கு எந்த தகுதியும் இல்லை என பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கைக்கு துரைமுருகன் அளித்துள்ள பதில் அறிக்கை
1991ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த போது காட்பாடி வெடிமருந்து தொழிற்சாலை நலிவடைந்து விட்டதாகக் கூறி கோவையைச் சேர்ந்த ஒருவருக்கு விற்க முயற்சி செய்தார்.
அந்த செய்தி வெளியானதும் தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். திமுக தலைவர் கருணாநிதி கடுமையான கண்டனத்தை தெரிவித்து அறிக்கை விட்ட பின்னர் தான் தொழிற்சாலையை விற்கும் முயற்சியை அன்றைய ஜெயலலிதா அரசு கைவிட்டது.
மீண்டும் 2001ல் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பின் தொழிற்சாலையை விற்க அரசாணை பிறப்பித்து டெண்டரும் விட்டுவிட்டார். நல்ல வேளையாக சில அதிகாரிகளுக்கு டெண்டர் கேட்டவர்களுடன் ஏற்பட்ட கருத்து மாறுபாட்டால் தொழிற்சாலை தப்பித்தது என்று கூறியுள்ளார் துரைமுருகன்.












Click it and Unblock the Notifications