11 மாநிலங்களில் நக்சல் நடமாட்டம்: மத்திய அரசு
டெல்லி:11 மாநிலங்களில் மட்டுமே நக்சலைட் அட்டகாசம் இருப்பதாக மத்திய அரசு இன்று ராஜ்யசபாவில் தெரிவித்தது.
ராஜ்யசபாவில் இதுதொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஷ்வால் கூறுகையில்,
கடந்த இரண்டு மாதத்தில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 30 பேர் சட்டீஸ்கார் மாநிலத்திலும், கடந்த ஜூன் மாதம் மூன்று பாதுகாப்புப் படையினர் ஆந்திரா மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களிலும் கொல்லப்பட்டுள்ளனர்.
நக்சலைட்டுகள் தங்களுக்கு ஆயுதங்கள் தேவையென்றால் பாதுகாப்புப் படையினரை தாக்கிவிட்டு திருடி செல்கின்றனர். பின்பு அதே போன்று அவர்களே ஆயுதங்களை தயார் செய்கிறார்கள். ஆனால் நக்சல்கள் எந்தவொரு ஆயுதத்தையும் வெளிநாட்டிலிருந்து வாங்கியதாக தெரியவில்லை.
நக்சல்களால் தாக்குதல் ஏற்பட்டாலும் மாநிலங்களில் சட்டம், ஒழுங்கு சீர்குலையாமல் மத்திய அரசு கண்காணித்து வருகிறது.
நக்சல்களை ஒழிக்க மத்திய அரசு சிறப்பு கமாண்டோ படையை நக்சலைட்டுகள் அதிகம் நடமாட்டம் உள்ள மாநிலங்களில் அமைக்கவிருக்கிறது என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications