திருச்செந்தூர் ஆவணி திருவிழா நாளை ஆரம்பம்
திருச்செந்தூர்:
முருக கடவுளின் அறுபடை வீடான திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நாளை (31ம் தேதி) ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
![]() |
நாளை அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படும். அதிகாலை 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெறும்.
காலை 5 மணிக்கு கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெறும்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சிகள்:
செப்டம்பர் 6ம் தேதி ஏழாம் திருநாள் நடைபெறும். இந்நாளில் மாலை 4 மணியளவில் சுவாமி சண்முகர் வள்ளி தெய்வானையுடன் செம்பட்டு அணிந்து தங்க சப்பரத்தில் எட்டு வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார்
7ம் தேதி அதிகாலை 4 மணிக்கு சுவாமி சண்முகர் வள்ளி தெய்வானையுடன் வெண்பட்டு சாத்தி வெள்ளி சப்பரத்தில் எட்டு வீதிகளிலும் உலா வருவார்.
பின்னர் சுவாமி சண்முக வள்ளி தெய்வானையுடன் பச்சை நிற பட்டு அணிந்து பச்சைநிற கடைசல் சப்பரத்தில் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் உலா வருவார்.
9ம் தேதி தேரோட்டம் நடைபெறும்.
இந்த திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகமும், திருச்செந்தூர் நகராட்சியும் செய்துள்ளன.
ஆவணித் திருவிழாவை முன்னிட்டு பல ஊர்களில் இருந்தும் திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.













Click it and Unblock the Notifications