For Daily Alerts
Just In
புதுச்சேரி: மீனவர்கள் மோதல்- 9 பேர் காயம்
புதுச்சேரி:புதுச்சேரியில் மீனவர்களுக்கிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 9 பேர் காயமடைந்தனர்.
புதுச்சேரி காளப்பேட்டையை சேர்ந்த மீனவர்களுக்கும், விழுப்புரம் மாவட்டம் கூனிமேடை சேர்ந்த மீனவர்களுக்கும் நேற்று கடல் பகுதியில் மீன்பிடிப்பதில் கடும் மோதல் ஏற்பட்டது.
கூனிமேடு மீனவர்கள் மீன்பிடிக்கும் கடல் எல்லைக்குள், புதுச்சேரி, காளப்பேட்டையை சேர்ந்த மீனவர்கள் அத்துமீறி வந்து மீன் பிடித்துள்ளனர். இதனால் இரு தரப்பினருக்கும் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.
இதில் காளப்பேட்டை மீனவர்களின் படகு சேதமடைந்தது. பின்னர் இருதரப்பினருக்கும் இடையே சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு சேதமடைந்த படகும் புதுச்சேரி மீனவர்களிடம் திருப்பி தரப்பட்டது.
இந்த மோதலில் 9 மீனவர்களுக்கு காயம் ஏற்பட்டது.
Comments
Story first published: Friday, August 31, 2007, 5:30 [IST]