இன்று கோகுலாஷ்டமி- விசேஷ பூஜைகள்br/கிருஷ்ணர் வேடமிட்டு 'குதூகலம்'
சென்னை:
கிருஷ்ண பரமாத்மா அவதரித்த நாளான இன்று நாடு முழுவதும் கோகுலாஷ்டமி சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
![]() | ![]() |
![]() | ![]() |
இதையொட்டி கோவில்களில் விசேஷ பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் பங்கேற்ற நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன.
அஷ்டமி தினத்தில் அவதரித்தவன் கிருஷ்ணன். அஷ்டமி என்றாலே அந்த நாளில் விசேஷங்கள் செய்வதில்லை இந்துக்கள். ஆனால் கிருஷ்ணர் பிறந்த அஷ்டமி நாளில், அதாவது கோகுலாஷ்டமி நாளை வெகு விமரிசையாக இந்துக்கள் கொண்டாடுகின்றனர். அத்தகைய சிறப்புப் பெற்றவன் கிருஷ்ணன்.
நவநீத கிருஷ்ணன், கண்ணன், கார்மேகன், கார்வண்ணன், கருப்பன், சின்னக் கண்ணன் என பல பெயர்களில் அறியப்படும் கிருஷ்ணரின் பிறந்த நாளான கோகுலாஷ்டமி வட மாநிலங்களில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
அந்த வகையில், கோகுலாஷ்டமி இன்று நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோவில்களிலும், வீடுகளிலும் சிறப்பு பூஜைகள், நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கோகுலாஷ்டமி விழாவையொட்டி நேற்று இரவு உக்ரசீனிவாச மூர்த்திக்கும், ஸ்ரீகிருஷ்ண பகவானுக்கும் ஏகாந்த திருமஞ்சன நிகழ்ச்சி நடந்தது.
இன்று மதியம் கோவில் மலையப்பசாமி, ஸ்ரீகிருஷ்ண பகவான் ஆகியோர் தனித்தனியாக திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
அப்போது ஜீயங்கார் மடம், மகந்து மடம் ஆகியவற்றில் நடந்த உரியடி விழாவிலும் ஏழுமலையான் கலந்து கொண்டு காட்சி தந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
கோகுலாஷ்டமி விழா என்பதால் கர்நாடகம், தமிழகம், கேரளா போன்ற மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்துள்ளனர்.
பக்தர்கள் வசதிக்காக கட்டண சேவைகளான கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, வசந்த உற்சவம், சஹஸ்ர அலங்கார சேவை போன்ற சேவைகள் இன்று ரத்து செய்யப்பட்டன.
இதுதவிர குழந்தைகள் கிருஷ்ணர் வேடமிட்டு வரும் நிகழ்ச்சிகளுக்கும் பல்வேறு இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தனர். கிருஷ்ணர் வேடமிட்டு வரும் குழந்தைளுக்கான போட்டியும் நடைபெற்றது.
வட மாநிலங்களில் கிருஷ்ணர் வேடமிட்டவர்கள் கலந்து கொள்ளும் பேரணிகளும் இன்று நடக்கின்றன.
















Click it and Unblock the Notifications