ஜாதி, மதக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை: தேமுதிக
புதுக்கோட்டை:
ஜாதிக் கட்சி, மதக் கட்சி, ஊழல் புரியும் கட்சிகளுடன் தேமுதிக ஒருபோதும் கூட்டணி வைக்காது என்று தேமுதிக அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
தேமுதிக ஆரம்பித்து 3 ஆண்டுகள் ஆவதால் புதுக்கோட்டையில் 3வது ஆண்டு விழாவை அக்கட்சி நடத்தவுள்ளது. இதையொட்டி பிரமாண்ட மாநாடு மற்றும் பேரணி நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை பார்வையிடுவதற்காக பண்ருட்டி ராமச்சந்திரன் புதுக்கோட்டை வந்திருந்தார். அங்கு செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சட்டசபைத் தேர்தலைப் பொறுத்தவரை தனித்தே போட்டியிடுவோம். மக்களவைத் தேர்தலில் கூட்டணி குறித்து யோசிப்போம்.
அதேசமயம், மதவாத, ஊழல் புரியும் கட்சிகள் மற்றும் ஜாதிக் கட்சிகளுடன் நாங்கள் ஒருபோதும் கூட்டு சேர மாட்டோம்.
தற்போதைய திமுக ஆட்சியைப் பற்றி குறிப்பிட்டுச் சொல்லும்படி ஒன்றும் இல்லை. படு மோசமான ஆட்சியை திமுக நடத்தி வருகிறது என்று மட்டுமே சொல்ல முடியும்.
புதுக்கோட்டை தொகுதியை மத்திய அரசும் மறந்து விட்டது, மாநில அரசும் மறந்து விட்டது. ஆனால் நாங்கள் மறக்கவில்லை. அதனால்தான் இங்கு 3வது ஆண்டு விழா மாநாட்டை நடத்துகிறோம்.
தமிழ்நாட்டுக்கே இந்த மாநாடு முன்மாதிரியாக அமையும். லட்சக்கணக்கான தொண்டர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கிறார்கள் என்றார்.












Click it and Unblock the Notifications