ஆசிய போட்டியில் பதக்கம் வென்ற சாந்தி தற்கொலை முயற்சி
புதுக்கோட்டை:
ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற சாந்தி தற்கொலைக்கு முயன்று தற்போது ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

டாக்காவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஓட்டப் பந்தயத்தில் தமிழகத்தைச் சேர்ந்த சாந்தி வெள்ளி பதக்கம் வென்றார். பின்னர் திடீரென அவர் பெண்ணா அல்லது ஆணா என்று சர்ச்சை ஏற்பட்டது. இதனால் அவரின் பதக்கம் பறிக்கப்பட்டது.

இருப்பினும் அவரை ஊக்கப்படுத்துவதற்காக தமிழக அரசின் சார்பாக முதலைமைச்சர் கருணாநிதி 15 லட்ச ரூபாய் பணமும், ரூ. 1.5 லட்சம் மதிப்புள்ள டிவியும் பரிசாக கொடுத்து அவரை பாராட்டினார்.
இந்நிலையில் சாந்தி விஷம் குடித்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார். அவர் தற்போது புதுக்கோட்டை அரசு மருத்துமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எதற்காக அவர் தற்கொலைக்கு முயன்றார் எனத் தெரியவில்லை.












Click it and Unblock the Notifications