காவலாளியின் செக்ஸ் டார்ச்சர்-மாணவி தற்கொலை
பெங்களூர்:
விடுதி காவலாளியின் செக்ஸ் தொல்லையால் மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பெங்களூர் அருகே பிடுதியில் பசவ கங்கோத்ரி என்ற ஆசிரம பள்ளி உள்ளது. இதில் தங்கி படித்து வந்தவர் சிக்மகளூரைச் சேர்ந்த ஆஷா (15).
சில நாட்களுக்கு முன் தனது பெற்றோருடன் தொலைபேசியில் பேசிய ஆஷா, தன்னை இங்கிருந்து அழைத்து சென்று விடுமாறும், இங்கு தன்னால் இருக்க இயலாது என்றும் கூறியுள்ளார்.
இதையடுத்து நேற்று ஆஷாவின் பெற்றோர் ஆசிரமத்திற்கு வந்தனர். ஆனால் ஆஷாவை காணவில்லை. பல இடங்களிலும் தேடியபோது ஆசிரம வளாகத்தில் உள்ள ஒரு கிணற்றில் ஆஷா பிணமாகக் கிடந்தார்.
தகவல் கிடைத்ததும் போலீசார் வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் விடுதி காவலாளி ஒருவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் விசாரணை நடத்திய போலீசார் பிற மாணவிகளிடமும் விசாரணை நடத்தினர்.
அப்போது விடுதி காவலாளி ஆஷாவுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்து வந்தது தெரிய வந்தது. செக்ஸ் கொடுமை தாங்காமல் தான் ஆஷா தனது பெற்றோருக்கு போன் செய்து தன்னை இங்கிருந்து அழைத்துச் செல்லுமாறு கூறியதாகத் தெரிகிறது.
இதையடுத்து காவலாளி கைது செய்யப்படுவார் எனத் தெரிகிறது.
ஆஷாவின் சகோதரிகள் 3 பேரும் இந்த ஆசிரமத்தில் தான் தங்கி படித்துள்ளனர். ஆனால் அவர்களும் பாதியில் படிப்பை விட்டு விட்டு வீட்டிற்கே சென்று விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications