நள்ளிரவில் நிரம்பியது மேட்டூர் அணை:br/விவசாயிகள் குதூகலம்
மேட்டூர்:
மேட்டூர் அணை நேற்று நள்ளிரவு மீண்டும் நிரம்பி சாதனை படைத்துள்ளது. ஒரே ஆண்டில் 4வது முறையாக அணை நிரம்பியது இதுவே முதல்முறையாகும்.
கர்நாடகத்தில் பெய்து வரும் கன மழையால் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. நேற்று காலை நீர்மட்டம் 119.6 அடியாக இருந்தது.
இரவு 11 மணியளவில் அணை தனது முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டியது.
இந்த ஆண்டு கடந்த ஜூலை 20ம் தேதி முதல் முறையாக அணை நிரம்பியது. இதையடுத்து ஆகஸ்டு 8, 27ம் தேதிகளிலும் மீண்டும் நிரம்பியது. இப்போது 4வது முறையாக நிரம்பி உள்ளது.
இப்போது அணைக்கு வினாடிக்கு 35,000 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது.
அணையிலிருந்து 25,733 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதனால் காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications